உண்மை பேசுவது வேறு? சத்தியத்ததோடு வாழ்வது வேறு?
இங்கு பலரும் சத்தியம் என்றால் நாம் ஒருவருக்கு கொடுக்கக்கூடிய வாக்கை காப்பாற்றக்கூடியது என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் சத்தியம் என்றால் என்ன? அந்த சத்தியம் எவ்வாறு உண்மையில் நாம் செயல்படுத்த வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
சத்தியம் என்பது வெறும் உண்மையை பேசுவது மட்டுமல்ல. எந்த சூழ்நிலையிலும் தர்மத்தை விட்டு விலகாமல் நேர்மையாக வாழ்வது ஆகும்.
பயம்:
அதாவது பயம் வந்தாலும் அதிலிருந்து தப்பிப்பதற்கு பொய்யை தேர்ந்தெடுக்காமல் இருப்பது சத்தியம்.
நேர்மை:
யாருமே நம்மை பார்ப்பதற்கு இல்லை என்கின்ற இடத்திலும் தவறான செயல்களை செய்யாமல் இருப்பது சத்தியம்.

தர்மம்:
சத்தியத்தை பின்பற்றுவது என்பது இறைவனுக்கு நாம் அர்ப்பணிக்க கூடிய ஒரு முழு வழிபாடு ஆகும். உண்மையிலேயே பல நேரங்களில் உண்மையை சொல்வதால் கஷ்டம் வந்தாலும் பின்னர் நமக்கு மன அமைதி கிடைக்கும்.
இந்த உலகத்தில் சத்தியத்தின் பாதையில் நடப்பவர்கள் இறைவனுடைய அருள் பாதையில் நடப்பவராக இருக்கிறார். இறைவனுடைய அருட்பார்வையில் இருந்து எப்பொழுதும் விலகாமல் இருக்கிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |