கர்ம பலன் எப்பொழுது வேலை செய்யும்?
நாம் அனைவரும் கர்மாவை பற்றி கேள்வி பட்டு இருப்போம்.அதாவது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி உண்டு.
அதாவது மனிதனாக நாம் செய்யும் தவறுகள் பேசும் வார்த்தைகள் செயல்களுக்கு எல்லாம் கர்ம பலன்கள் இருக்கிறது. ஒருவர் நல்லது செய்தால் நன்மை உண்டாகும்.தீயது செய்தால் கண்டிப்பாக தீமை ஏற்படும்.
இது தான் நியதி. அதனால் தான் பெரியவர்கள் அவர்கள் வாழ்ந்து தெளிந்த காரணத்தினால் நமக்கு அறிவுரை சொல்கிறார்கள்.
மேலும்,நம் இறுதி மூச்சுக்குள் கண்டிப்பாக மனிதன் அவன் செய்த செயலுக்கான பலனை அவன் கண் முன்னாள் பார்க்க முடியும்.
இவ்வளவு தெரிந்தும்,மனிதனால் அவனுடைய நாவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கமுடியவில்லை.காரணம் "தான்" என்ற அகங்காரம் ஆணவம் தான் காரணம்.
மேலும் கர்ம வினையானது ஒருவருக்கு பொழுது வேலை செய்யும் என்றால்,அதற்கான காலங்களும் இருக்கிறது.
கர்ம எல்லா நேரங்களிலும் வேலை செய்வது இல்லை.அதாவது ஒரு நபருக்கு ஜாதகத்தில் ஜென்ம ராசியில் குரு,அஷ்டமத்தில் சனி ஏழரை சனி போன்ற நேரங்களில் தான் அவர்களுக்கான கர்ம பலன்கள் அதிகமாக காணப்படுகிறது.
பொதுவாக அந்த நேரத்தில் மனிதன் கண்டிப்பாக அவன் செய்த தவறை நன்மைகளை உணர்ந்து விடுவான்,அதை போல் அவனுடைய காலமும் உணர்த்தி விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |