எந்த நாளில் தேன் தானம் செய்ய வேண்டும்?
தேன் என்பது ஆரோக்கியத்திற்கும் சரும பாதுகாப்பிற்கும் பயன்படும் ஒரு பொருளாகவே இன்று வரையில் கருதப்பட்டு வருகிறது.
இதனை உட்கொள்வதன் மூலம் மனிதனுக்கு ஏற்படும் பல நோய்கள் குணமாகும். இதைபோல், ஜோதிடத்திலும் தேன் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தேன் தானம் செய்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பது ஐதீகம். அந்தவகையில் எந்த நாளில் தேன் தானம் செய்வது உகந்ததாக கருதப்படுகிறது என்பதை விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேன் தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்?
உங்கள் ஜாதகத்தில் சனியின் சடேசாதி மற்றும் தையாவின் தாக்கம் இருந்தால், தேன் தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இதிலிருந்து ஒருவர் நிவாரணம் பெறுவது மட்டுமல்லாமல் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் வெளிவர முடியும்.
இது தவிர, தேன் தானம் செய்வதாக இருந்தால், சனிக்கிழமை அன்று செய்யுங்கள். இதனால் சனி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீங்கும் என்பது ஐதீகம்.
ஞாயிற்றுக்கிழமை தேன் தானம்
உங்கள் ஜாதகத்தில் சூரிய தோஷம் இருந்தும் எந்த வேலையிலும் வெற்றி கிடைக்காமல் இருந்தால் ஞாயிற்றுக்கிழமை தேன் தானம் செய்யலாம்.
ஞாயிற்றுக்கிழமை தேன் தானம் செய்தால், மரியாதை கூடும், நோய்கள் மற்றும் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். இது தவிர சுப பலன்களையும் பெறலாம்.
ராகு-கேது விலக தேன் தானம்
உங்கள் ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவின் நிலை வலுவிழந்து தோல்வியை சந்திக்க நேர்ந்தால் உடனே தேன் தானம் செய்யலாம். இதனால் ராகு, கேது தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
சுக்கிரன் நிலை வலுப்பெற
உங்கள் ஜாதகத்தில் சுக்கிர தோஷம் இருந்து நல்ல பலன்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றால், வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவிக்கு தேன் அர்ச்சனை செய்து, அந்த தேனை குழந்தைக்கு தானம் செய்யலாம்.
இதைச் செய்வதன் மூலம் ஒரு நபர் பொருள் மகிழ்ச்சியை அடைந்து மன ரீதியாகவும் நிம்மதியாகவும் இருப்பார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |