உங்கள் ஜாதகத்தில் சிவபெருமான் அருள் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?
இந்த பிரபஞ்சத்தில் நாம் என்ன செய்தாலும் அதற்கு ஒரு தொடர்பு இருக்கும். அந்த வகையில் நாம் வணங்குகின்ற தெய்வத்திற்கும் நம்முடைய ஜாதகத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பில் இல்லாமல் நாம் எதையும் செய்ய முடியாது.
அப்படியாக ஒருவருக்கு சிவபெருமான் மீது அதிக அன்பும் பக்தியும் வருவதற்கு அவர்களுடைய ஜாதகம் அமைப்பும் காரணமாக இருக்கிறது. அப்படியாக எந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு சிவபெருமானுடைய முழு அருளில் இருக்கும் என்று பார்ப்போம்.

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் மற்றும் சனி சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் அவர்களுடைய மனதில் எப்பொழுதும் தனிமை அல்லது துறவு எண்ணம் இருக்கும். அதனால் இவர்கள் தனிமை விரும்பியாக இருப்பார்கள்.
தனிமையில் இவர்கள் கோவிலுக்கு செல்வதும் மற்றும் வாழ்க்கை பற்றிய புரிந்து கொள்வதற்கும் முயற்சி செய்வார்கள். அதனால் இவர்கள் பற்றற்ற அருளை வழங்கக்கூடிய சிவபெருமான் மீது இயல்பாகவே அன்பும் பக்தியும் கொண்டு இருப்பார்கள்.

சிவலிங்கத்தை பார்த்தால் இவர்களை அறியாமல் இவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிடும். ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 5, 9, 12 ஆகிய இடத்தில் கேது பகவான் இருந்தால் இவர்களுக்கு சித்தருடைய தேடல் யோக சாதனை மீது ஆர்வம் சிவ வழிபாடுகளில் விருப்பம் போன்ற நிலைமை உண்டாகும்.
அதேபோல் ஒருவருக்கு ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சனி, கேது, சூரியன் இருந்தால் அவர்களுக்கு திடீர் என்று ஆன்மீகம் மீது ஒரு பயணம் உண்டாகும். அமைதியை தேடி செல்வார்கள். இந்த அமைப்பு கொண்டவர்கள் சிவபெருமானை மனதில் இடைவிடாத நினைத்து வழிபாடு செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |