மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு சொந்தத்திலேயே திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்பு உண்டு
ஜோதிடம் வைத்து நாம் நம்முடைய வாழ்க்கை முறையை கட்டாயமாக தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், ஜோதிட கணிப்புகள் வழியாக நம்முடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? சொந்தத்தில் திருமணம் நடக்குமா? அல்லது காதலித்து திருமணம் செய்து கொள்வோமா என்பதை பற்றி கட்டாயமாக நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம்.
அப்படியாக, எந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு சொந்தத்தில் திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம். ஒருவருக்கு ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் தந்தை ஸ்தானத்தை குறிக்கக் கூடியது. மேலும், ஐந்தாம் இடத்தில் சுப கிரகங்கள் இருந்தால் தந்தை வழி உறவுகளால் இவர்களுக்கு திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
அதேபோல், ஏழாம் வீட்டு அதிபதி சந்திரனின் சாரத்தை பெற்றிருந்தால் தாய் வழி உறவுகளால் திருமணம் நடக்கலாம்.
மேலும், ஏழாம் வீட்டு அதிபதி செவ்வாய் நட்சத்திரத்தின் சாரத்தை பெற்றிருந்தால் அல்லது மூன்றாம் வீட்டில் சுபகிரகங்கள் இருந்தாலும் நெருங்கிய சொந்தங்களுக்குள் இவர்களுக்கு திருமணம் நடைபெறும்.
ஏழாம் வீட்டு அதிபதி ராகு கேது அல்லது சனி உடன் தொடர்புடையதாக இருந்தால் சொந்தங்களுக்கு வெளியே அல்லது தனிப்பட்ட முறையில் காதலித்து திருமணம் செய்வதையே இவர்கள் விரும்புவார்கள். சொந்தத்தில் திருமணம் நடைபெற்றால் அல்லது செய்ய விரும்பினால் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய சூரியன் மட்டும் சந்திரனை வழிபாடு செய்வது சிறப்பு.
இவர்கள் கோயில்களில் இருக்கக்கூடிய புறாக்களுக்கு கோதுமை தானியம் போடுவது இவர்களுக்கு ஒரு சிறப்பான பரிகாரமாகவே அமையும். திருமணம் தொடர்பான பல்வேறு தகவல்களை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |