கிருஷ்ணருக்கு வெண்ணை வைத்து படைப்பதறகான முக்கிய காரணம் தெரியுமா?'

By Sakthi Raj Aug 25, 2024 11:23 AM GMT
Report

கிருஷ்ணர் என்றாலே வெண்ணெய் தான் நம் நினைவிற்கு வரும்.அப்படியாக கிருஷ்ணருக்கு வெண்ணை வைத்து வழிபடுவதற்கான முக்கிய காரணம் தெரியுமா?அதை பற்றி பார்ப்போம். கண்ணன் என்றாலே கோகுலத்தில் வெண்ணை திருடி உண்டார் என்ற கதை தெரியும்.

எத்தனையோ பொருட்கள் இருந்தாலும் கண்ணனுக்கு ஏன் வெண்ணெய் மட்டும் மிகவும் பிரியமானதாக இருந்தது?கண்ணனுக்கு வெண்ணெய் படைத்து வழிபடுவதற்கு என்ன காரணம்? என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தெய்வங்களில் கிருஷ்ணருக்கும், ஆஞ்சநேயருக்கும் வெண்ணெய் படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். அதிலும் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானது வெண்ணெய். அவர் கோகுலத்தில் இருக்கும் போது வீடுகளில் வெண்ணெய் திருடு உண்டதாக புராணங்கள் சொல்கின்றன.

கிருஷ்ணருக்கு வெண்ணை வைத்து படைப்பதறகான முக்கிய காரணம் தெரியுமா?

அதனால் அதை நினைவுபடுத்தும் விதமாக நாமும் வருடந்தோறும் கண்ணனுக்கு வெண்ணெய் படைத்து வழிபடுகிறோம் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கண்ணன் வெண்ணெய் திருடு சாப்பிட்டதற்கும், அவருக்கு வெண்ணெய் பிரியமாக இருப்பதற்கும் பின்னால் மிகப் பெரிய ஆன்மிக ரகசியம் அடங்கி உள்ளது.

கண்ணன் வெண்வெய் திருடியது ஏன்?கோகுலத்திற்கு தலைவனாக இருந்தவர் நந்தகோபன். அவர்களிடம் பெரிய பசுக் கூட்டமேஇருந்தது.இருந்தாலும் அவரின் பிள்ளையான கண்ணன் எதற்காக கோகுலத்தில் மற்ற வீடுகள் ஒவ்வொன்றிற்கும் சென்று வெண்ணெய் திருடி சாப்பிட வேண்டும்?

அதுவும் இல்லாமல், குழந்தையாக இருந்த கண்ணனுக்கு, தாய் யசோதா ஒரு நாளைக்கு எட்டு முறை உணவு கொடுத்து வளத்திருக்கிறார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் சொல்ல வேண்டிய முக்கியமான மந்திரம்

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் சொல்ல வேண்டிய முக்கியமான மந்திரம்


அப்படிப்பட்ட பாசமான தாய், கண்ணன் கேட்டால் கொஞ்சம் வெண்ணெய் கொடுக்காமலா போய் விடப் போகிறாள்? அப்படி இருந்து, மற்ற தெய்வங்களுக்கும் இல்லாத சிறப்பாக கண்ணன் வெண்ணெய் திருடியதற்கு பின்னால் இருக்கும் காரணம் இது தான்.

அதாவது நமக்குள் இறை பக்தியை உறை விட்டு, வைராக்கியம் என்னும் உரியிலே வைத்து, பக்தியாகிய மத்தையும், ஞானமாகிய கயிறையும் கொண்டு கடைந்தால், நமக்குள் மறைந்திருக்கும் இறை தன்மையாகிய வெண்ணெய் வெளிப்படும்.

மத்தில் தான் வெண்ணெய் படியும், கயிறில் படியாது. அது போல் பக்தியில் தான் இறைவன் நிறைந்திருப்பான். வெறும் ஞானம் மட்டும் இருந்தால் அங்கு இறைவன் ஒட்டுவது இல்லை. பக்தியில் வெளிப்பட்ட இறைத்தன்மையாகிய வெண்ணெய்யை உண்டு, கோபியர்களுக்கு அருள் புரிந்ததே இதற்கு பின்னால் இருக்கும் தத்துவமாகும்.

கிருஷ்ணருக்கு வெண்ணை வைத்து படைப்பதறகான முக்கிய காரணம் தெரியுமா?

வெண்ணெய் படைத்து வழிபட காரணம் : மேலும் வெண்ணெய், ஆன்மாவுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. அந்த ஆன்மாவில் சேர்ந்து இருக்கும் கர்மாக்கள், நீக்கப்பட்டு, சுத்தமான வெண்ணெய் வெளிப்படும். அந்த வெண்ணெய்யை இறைவன் விரும்பி ஏற்றுக் கொள்வார் என்பதே இதன் ஐதீகம்.

ஒவ்வொரு ஆன்மாவையும் இறைவன் விரும்பி ஏற்றுக் கொள்வதே கண்ணன் வெண்ணெய் திருடி சாப்பிட்டதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம்.

நாம் இறைவனிடம் இருந்து விலகி இருந்தாலும், அவர் நம்மை தேடி வந்து திருடி ஏற்றுக் கொள்வார். தன்னை வணங்குபவர்களை மட்டுமல்ல, வணங்காதவர்களின் ஆன்மாக்களையும் இறைவன் விருப்பமுடன் ஏற்றுக் கொள்வான்.

அதனால் கண்ணன் நம்முடைய ஆன்மாவை ஏற்றுக் கொண்டு, நமக்கு நன்மைகள் வழங்க வேண்டும் என்பதற்காகவும், நம்முடைய ஆன்மாவையே இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து வழிபடுவதற்கு சமம் என்பதாலும் கண்ணனுக்கு வெண்ணெய் படைத்து வழிபடுகிறோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US