எல்லாம் இழந்து நிற்கின்ற பொழுது இவரை பற்றிக் கொண்டால் நொடியில் காலம் மாறும்
மனிதர்களாகிய எல்லோருக்குமே வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டங்களும் பொருளாதார நெருக்கடிகளும் வருவது இயல்பான ஒன்றுதான். அப்படியாக, அந்த சமயங்களில் நாம் வேண்டாத கோவில்கள் இருக்காது. எத்தனை தெய்வங்களை வழிபட முடியுமோ அத்தனை தெய்வங்களை நாம் முடிந்த அளவிற்கு வழிபாடு செய்து விடுவோம்.
ஆனால், பலரும் செய்கின்ற தவறு அந்த நேரத்தில் குலதெய்வத்தை மறந்து விடுவது. இங்குதான் ஒரு சூட்சமத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். என்னதான் இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்தாலும் நம்முடைய வம்சா வழியாக இருக்க கூடிய குலதெய்வம் தான் இறுதியில் நம்மை மிகப்பெரிய துன்பத்திலிருந்து காக்கக்கூடியவராக இருக்கிறார்.

பலரும் வழியே இல்லை என்கின்ற பொழுது தான் குல தெய்வத்தை தஞ்சம் அடைகிறார்கள். அந்த வகையில் இக்கட்டான நிலையில் எல்லா தெய்வங்களும் விலகி விட்டது, ஜோதிடம் கை கொடுக்கவில்லை என்கின்ற பொழுது குலதெய்வத்திடம் சரணாகதி அடைந்து விட்டால் வாழ்க்கை அந்த இடத்திலிருந்து ஒளிமயமாவதை நாம் பார்க்க முடியும்.
குலதெய்வம் என்பவர் என்னைத்தவிர வேற கதி இல்லை என்று சரணடைந்து நீயே என்னுடைய குடும்பத்தையும் என்னுடைய துன்பத்தை தீர்க்க வேண்டும், நீயே என்னுடைய வழிகாட்டி என்று நாம் சரணடையும் பொழுது தான் நமக்கு குலதெய்வத்தினுடைய முழு அருள் கிடைக்கும்.
குலதெய்வம் எப்பொழுதும் நம் மக்கள் நம்மிடம் இருக்க வேண்டும், நம்மை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும், நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்கின்ற ஒரு எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆக, எல்லா திசைகளிலும் நீங்கள் கைவிடப்பட்டிருக்கிறீர்கள் என்ற பொழுது குலதெய்வத்திடம் சென்று சரண் அடைந்து அவருக்கு 11 ரூபாயை முடித்து வைத்துவிட்டு அவர் முன்பு ஒரு விளக்கேற்றி வழிபாடு செய்ய தொடங்கி விட்டால் உங்களுடைய துன்பங்கள் படிப்படியாக குறைவதை காணலாம்.

நீங்கள் இந்த வழிபாட்டிற்கு குலதெய்வம் ஆலயத்திற்கு நேராக செல்ல வேண்டும் என்பது அல்ல. நீங்கள் இருக்கும் இடத்திலே மனதார குலதெய்வத்தை மனதில் நிறுத்தி விளக்கேற்றி தினமும் அவருடன் பேசி வாருங்கள்.
அவர்தான் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கக்கூடிய காவல் தெய்வமாக இருக்கப் போகிறார். உங்கள் வாழ்க்கையில் நொடிப்பொழுதில் மாயாஜாலம் நிகழ வேண்டும் என்றால் நிச்சயம் குலதெய்வத்தினுடைய அருள் அவசியம். அவரை மறந்து எத்தனை கோயில் சென்றாலும் ஒரு பயனும் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |