இந்த தேதியில் பிறந்த பெண்களால் கணவருக்கு ராஜயோகம் உண்டாகுமாம்
ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அதாவது எண் கணிதத்தை வைத்து நம்முடைய எதிர்கால வாழ்க்கை, அவர்களுடைய வாழ்க்கை துணை பெற்றோர்களுடைய உடல் ஆரோக்கியம் என்று எல்லா விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில தேதியில் பிறந்த பெண்களால் கணவருக்கு மிகப்பெரிய அளவில் ராஜயோகம் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.

அதாவது நீங்கள் 30 என்ற தேதியில் பிறந்திருந்தால் அதை நாம் கூட்டும் பொழுது மூன்று என்று எண் வரும். அதுதான் ஒருவருடைய மூல எண் அல்லது ரேடிக்ஸ் எண்ணாக இருக்கிறது. ஒருவர் 1, 10, 19 அல்லது 28 ஆகிய ஆகிய எண்களில் பிறந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய மனைவியால் இவர்களுக்கு கௌரவம், அலுவலகத்தில் பதவி உயர்வு போன்ற விஷயங்களை பெறுவார்கள்.
ஆதனால் இந்த எண்ணில் பிறந்த மனைவியை கணவன் நல்ல முறையில் மதித்தும் அன்பாக வழிநடத்தும் பொழுது அவர்களுக்குரிய பெயரும் அங்கீகாரமும் தானாகவே அவர்களுக்கு கிடைக்கிறது.

அந்த வரிசையில் 2,11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் ஒருவருக்கு மனைவியாக கிடைக்கும் பொழுது அந்த கணவனுக்கு மன அமைதியும் அந்த மனைவி வந்த பிறகு ஒரு பெரிய அளவில் சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகமும் கிடைக்கிறது.
அது மட்டும் அல்லாமல் இவர்கள் மனைவி வந்த பிறகு குடும்பத்தில் அதிக அளவிலான ஒற்றுமை காணப்படும். அதேபோல் எண் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மனைவி வந்த பிறகு மிகப் பெரிய செல்வந்தராக மாறக்கூடிய வாய்ப்புகள் உருவாகிறது. ஆனால் மனைவியை மனம் காயப்படும் படி நடந்து கொண்டால் நிச்சயம் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார சரிவு உண்டாகுவதை நாம் பார்க்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |