ஆவணி மாதத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய ராசிகள்
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரக நிலைகள் மாறுபாடும்.அந்த வகையில் ஆவணி மாதத்தில் கவனமாக இருக்க கூடிய ராசிகள் பற்றி பார்ப்போம்.ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.
செவ்வாய் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். ஆவணி 2 ஆம் தேதி கன்னி ராசிக்கு செல்கிறார். புதன் சிம்மத்தில் அமர்ந்திருக்கிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். சுக்கிரன் கடக ராசியில் நிற்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மேஷ ராசியில் இருக்கிறார்.
கேது துலாம் ராசியில் இருக்கிறார். இப்படிப்பட்ட சஞ்சாரத்தில் ஆரம்பிக்கக்கூடியதாக இருப்பது தான் ஆவணி மாதம். இந்த ஆவணி மாதத்தில் இந்த கிரகங்களின் சஞ்சாரப்படி சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த கால கட்டத்தில் சில ராசிகள் மிகவும் கவனமாக செயல்படவேண்டிய சூழல் இருக்கிறது.
அதாவது அவர்கள் பிறரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது,மேலும் பிறரிடம் கடன் வாங்குதல் போன்ற எந்த செயலும் செய்யாமல் இருப்பது நன்மை தரும்.
அதையும் மீறி கடன் வாங்கினால் அதனால் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மேலும் யாருக்காகவும் எந்த ஒரு வாக்கு வாதத்தில் ஈடுபடுவது போன்ற செய்லகளில் தலை இடுவதை தவிர்ப்பது நல்லது.
மேலும் வண்டி வாகனங்களில் கவனமாக செல்வது மிக அவசியம்.
யாரிடமும் எதையும் நம்பி ரகசியத்தை சொல்லுவது தவிர்க்க வேண்டும்.அப்படியாக ஆவணி மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் ரிஷபம், கன்னி, மகரம், மீனம்.இவர்களை சற்று நிதானமாக செயல்படுவதால் பல எதிர்ப்புகள் சஞ்சலங்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |