ஜோதிடம் என்பது எதிர்காலத்தை கணித்து சொல்லக்கூடிய முக்கியமான சக்தி என்றே சொல்லலாம். அப்படியாக, ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஜோதிடர்கள் அந்த ஆண்டு முழுவதும் நடக்க இருப்பதை கணித்து சொல்வார்கள்.
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு எண் 9 (2 + 0 + 2 + 5 = 9) என்ற எண்ணுடன் பொருந்துகிறது. அப்படியாக, ஜோதிடத்தில் இந்த 9 என்ற எண் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த செவ்வாய் கிரகம் ஆற்றல், வலிமை, இதை எல்லாம் குறிக்கிறது என்றாலும், இந்த செவ்வாய்க்கு உக்கிரமான பண்புகளும் உண்டு.
அதனால் இவை திடீர் விபத்துகள் மோதல்கள் போன்ற சூழலை ஏற்படுத்தி விடும். அதன் அடிப்படையில், பெரும்பாலான ஜோதிடர்கள் இந்த 2025 ஆம் ஆண்டு எதிர்பாராத பல நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சொன்னார்கள்.
செவ்வாயின் வலிமை மற்றும் ஆற்றல்கள் இந்த ஆண்டு தீவிரமாக இருக்கும் என்பதால் கணிக்க முடியாத பல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளதாக கணித்தனர். போரின் கிரகமாக இருக்கும் இந்த செவ்வாய் கிரகத்தால் பல சர்ச்சைகள், வன்முறை வெடிப்புகள், மற்றும் பேரழிவு போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டது.
அதனால் பல ஜோதிடர்கள் இந்த 2025 ஆம் ஆண்டு ஒரு மிக பெரிய கொடிய ஆண்டாக இருக்கும் என்று கணித்தனர். இருப்பினும் செப்டம்பர்க்கு மேலாக இதனுடைய தாக்கம் சற்று குறைந்து காணப்படும் என்றே சொல்லலாம். ஆக, எதுவாக இருப்பினும் முடிந்த வரை கவனமாக இருப்போம். இறைவனை முழுமையாக நம்புவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |