தொடங்கும் கேது பார்வை.. கோடீஸ்வர யோகத்தை பெரும் 3 ராசிகள் யார்?
ஜோதிடத்தில் கேது பகவான் மற்றும் ராகு பகவான் நிழல் கிரகமாக இருக்கிறார். அப்படியாக, கேது பகவான் தன்னுடைய சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால் குறிப்பிட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டமும் செல்வாக்கும், உயர்ந்த அந்தஸ்தும் கிடைக்கும்.
அதாவது கேது தனது சொந்த நட்சத்திரமான மக நட்சத்திரத்திற்கு டிசம்பர் 5ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். கேதுவின் இந்த இடமாற்றம் எந்த ராசிகள் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்ட வாய்ப்புகளை கொடுக்கவுள்ளது என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் கேது பகவான் பெயர்ச்சி அடைகிறார். இதனால் இவர்களுக்கு வாழ்க்கையில் மிகச்சிறந்த மாற்றங்களை காண உள்ளார்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்து மன கசப்புகள் விலகும்.
உங்களை முக்கியமான நபர்கள் அழைத்து உங்களிடம் முக்கியமான பொறுப்புகளை கொடுக்கக்கூடிய நிலை உருவாகும். சக ஊழியர்களின் முழு ஆதரவையும் இந்த காலகட்டங்களில் நீங்கள் பெறுவீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு மூன்றாவது வீட்டில் கேது பகவான் இருக்கிறார். கேதுவின் பார்வையால் இவர்களுக்கு சிறு சிறு பிரச்சனைகளும் மனதில் குழப்பங்களும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் உதவியும் செய்வார்கள். தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். மேலும் சொந்த வீடு வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாக்கும்.
மீனம்:
கேது பகவான் மீனராசிக்கு ஆறாவது இடத்தில் பெயர்ச்சி ஆகிறார். கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு அதிக அளவிலான நன்மைகள் கிடைக்கிறது. இவர்களுக்கு நீண்ட நாட்கள் தடைபட்ட காரியங்கள் முடிவிற்கு வரும்.
உடல் நிலைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சொத்து தகராறுகள் நீங்கி குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். காதல் வாழ்க்கையில் தெளிவும் அதிர்ஷ்டமும் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |