நேரலை: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்
மதுரை என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் தான். அந்த வகையில், மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
தமிழக முழுவதும் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் இருந்து இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கு பக்தர்கள் வருகை தந்திருக்கிறார்கள். இன்று மதுரை முழுவதும் பக்தர்களின் அலை கடல் சூழ்ந்து இருக்கிறது.
உலகத்தை காக்கக்கூடிய சிவபெருமான் அன்னை மீனாட்சி தேவியை திருமணம் செய்த அற்புத இடமான அந்த மதுரை மாநகரம் இன்று விழாக் கோலத்தால் சூழ்ந்து இருக்கிறது. பொதுவாகவே கும்பாபிஷேகத்தில் நாம் கலந்து கொள்வது என்பது நமக்கு மிகச்சிறந்த சிறப்புகளையும் மாற்றத்தையும் கொடுக்கும்.
அதிலும், மதுரையை ஆளக்கூடிய அன்னை மீனாட்சி தேவியின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கின்ற பொழுது நமக்கு வாழ்க்கையில் பிறவி பலன் தீர்கிறது என்று சொல்கிறார்கள். மேலும், மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெறக்கூடிய இந்த அற்புதமான மகா கும்பாபிஷேகத்தை நாம் நேரலையில் பார்த்து கண்டுகளிப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |