சிவபெருமானுக்கு 3 மகள்கள் இருப்பது என்பது உண்மையா?
சைவ கடவுளான சிவபெருமானுக்கு புராணங்களில் மகன்கள் இருப்பதை தான் கேள்வி பட்டு இருப்போம். ஆனால் ஈசனுக்கு மூன்று மகள்களும் இருக்கிறார்கள் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். கர்ம வினைகளை அடியோடு அழிக்கும் வல்லமை பெற்றவர் சிவபெருமான்.
இவரை வழிபாடு செய்ய நம்முடைய பாவங்கள் எல்லாம் கரைந்து வாழ்க்கையில் தெளிவு பிறக்கிறது. அப்படியாக, இவருடைய மகள்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அவர்கள் தான் அசோக சுந்தரி, ஜோதி, வாசுகி ஆவார்கள்.
சிவபெருமானின் இந்த முதல் மகளான அசோக சுந்தரி பத்ம புராணத்தில் சிவன் பார்வதி ஆகியோருக்கு பிறந்த மகளாக வர்ணிக்கப்படுகிறாள். பிறகு அந்த குழந்தை வளர்ந்து நகுசன் என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்களுக்கு ‘யயாதி’ என்ற குழந்தை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பார்வதி தேவிக்கு பெண் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை தீர்க்கவே அழகாய் பிறந்த இந்த பெண் குழந்தைக்கு அசோக சுந்தரி என பெயர் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் காளி தேவி தான் சிவபெருமானின் பெண் குழந்தையான அசோக சுந்தரி என அப்பர், நம்பியாண்டார் நம்பி ஆகிய இருவரும் அவர்களது பாடல்களில் படியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமானின் இரண்டாவது குழந்தையான ஜோதி பிறந்ததற்கு பின்னால் இரண்டு விதமான கதைகள் சொல்லப்படுகிறது. அதாவது, சிவபெருமானின் ஒளி வட்டத்தில் இருந்து பிறந்தவர் என்றும், பார்வதி தேவியின் நெற்றியில் இருந்து வெளிப்பட்ட ஜோதியில் பிறந்தவர் என்று புராணம் உண்டு. இருப்பினும் இவர் தற்பொழுது தமிழகத்தில் ஜூவாலாமுகி என்ற பெயரில் வழிபடப்பட்டு வருகிறார்.
சிவபெருமானின் மூன்றாது மகளான வாசுகியை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். அமிர்தம் கடையும் போது வெளிவந்த ஆலகால விஷத்தை குடித்த சிவபெருமானை அதிலிருந்து விடுவித்தவர் இந்த வாசுகியே. இந்த வாசுகி எல்லா கோயில்களிலும் வழிபாடு செய்து வரும் பாம்பு தெய்வமாக இருக்கிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |