ஒரு மனிதனுடைய கர்ம வினைகளை குறைப்பது எப்படி? அது சாத்தியமா?
மனிதனுடைய வாழ்க்கையை என்பது கர்ம வினைகளால் பிணைக்கப்பட்டது. ஆனால், பல நேரங்களில் நமக்கு கர்ம வினை என்றால் என்ன? அதை எப்படி நாம் சரி செய்வது என்ற குழப்பங்கள் இருக்கும்.
அந்த வகையில், நாடி ஜோதிடர் ஸ்ரீ ரங்கராஜ ஸ்வாமி அவர்கள் மனித வாழ்க்கையின் கர்ம வினைகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்றும் அதனை பற்றிய விளக்கங்களையும் நமக்கு கொடுக்கிறார். அதை பார்ப்போம்.
நாடி ஜோதிடம் என்பது ஒருவருடைய கைரேகை அல்லது ஓலைச்சுவடியின் வழியாக நம்முடைய வாழ்நாள் முழு பலனை தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்க கூடிய ஒரு வகை ஜோதிடம் ஆகும்.
நாடி ஜோதிடம் கொண்டு நம் வாழ்க்கை தாய் தந்தை மற்றும் குழந்தைகளின் உறவு முறை மற்றும் கர்ம வினைகளின் தாக்கம் குறித்து நாம் எல்லா விஷயங்களையும் புரிந்து கொள்ளலாம்.
மேலும், கர்ம வினைகள் குறைய வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்க்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவை நம்முடைய துன்பங்களை அல்லது கர்ம வினைகளை அவர்களை அறியாமல் ஏற்றுக்கொண்டு நம்மை அந்த பாதிப்பில் இருந்து விடுவிக்கிறது.
அதோடு, ஒருவர் கர்ம வினையில் இருந்து விடுபடுவதற்கு கோவிலில் இருக்கக்கூடிய மீன்களுக்கு உணவளிப்பது மிக சிறந்த பலன் கொடுக்கும் என்றும் மேலும் ஒருவர் தர்ம வினைகளிலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்? கர்ம வினை என்றால் என்ன என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |