நீங்கள் துலாம் ராசியா? உங்களின் சிறப்பு என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் ஏழாவது ராசியாக இருக்கக்கூடியது துலாம். இந்த ராசியின் அதிபதி சுக்கிர பகவானாக இருக்கிறார். மேலும் துலாம் ராசியின் சின்னம் தராசு ஆகும். அதனால் இயல்பாகவே துலாம் ராசியினர் கடமை தவறாதவர்களாகவும், இரக்க குணம் கொண்டவர்களாகவும் அதே போல் மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள்.
இதைவிட முக்கியமாக துலாம் ராசியினர் கைராசி மிக்கவர்களாகவும் இருக்கக் கூடியவர்கள். குபேரராகும் வாய்ப்பை வழங்குபவர் இவர்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆகிறார். எனவே இவர்கள் சுகபோகங்களை நன்கு அனுபவிப்பவர்கள்.

இருப்பினும் சற்று முன் கோபக்காரர்கள். இந்த கோபத்தை மட்டும் இவர்கள் குறைத்துக் கொண்டால் மனிதர்களில் இவர்களே ஒரு சிறந்த மாணிக்கமாக இருப்பார்கள். நன்கு வசீகர பார்வையும் கவர்ச்சியான முக தோற்றமும் பெற்ற இவர்கள் சமுதாயத்தில் எப்பொழுதும் தனக்கென்று ஒரு தனி அந்தஸ்து பெற்று விளங்குபவர்கள்.
எந்த ஒரு நிலை வந்தாலும் தன்னிலை மாறாமல் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள். எதை செய்ய வேண்டும் என்றாலும் அதனை நன்கு அலசி ஆராய்ந்து பக்குவமாக முடிவெடுக்கக்கூடிய திறன் இவர்களுக்கு உண்டு.

அதை போல் இவர்கள் ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டால் அதிலிருந்து பின் வாங்க மாட்டார்கள். மிக மிக முக்கியமாக தோல்விகள் வந்தால் நிச்சயம் துவண்டு போக மாட்டார்கள். துலாம் ராசியினருக்கு கதை, கவிதை, கலை நிகழ்ச்சி போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் இருக்கும்.
வாழ்க்கையை அனுபவித்து ரசித்து வாழ வேண்டும் என்ற ஒரு மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் இந்த துலாம் ராசியினர். யாராவது ஒரு தொழில் தொடங்குகிறார்கள் என்றால் இவர்களை அழைத்து குத்து விளக்கு ஏற்றச் சொன்னால் நிச்சயம் அவர்களுடைய தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவிற்கு சென்று விடும்.
துலாம் ராசி பொருத்தவரை மிகவும் சிறப்பானவர்கள் என்றாலும் இவர்கள் உக்கிரமான தெய்வங்களை வழிபாடு செய்யாமல் சாந்தமாக இருக்கக்கூடிய தெய்வங்களை வழிபாடு செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |