பொதுவாக, நம்முடைய செயல்பாடுகளுக்கும் கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்புடையதாக ஜோதிட ரீதியாக பார்க்கப்படுகிறது, அப்படியாக, நம் வீடுகளில் செய்யக்கூடிய சில விஷயங்கள் நம்மை அறியாமல் ஒரு சில தோஷத்தை உண்டு செய்து விடும்.
அந்த வகையில் நாம் கட்டாயமாக வீடுகளில் செய்யக்கூடாத ஐந்து விஷயங்களை பற்றி பார்ப்போம். இதை செய்யும் பொழுது ராகு தோஷம் உண்டாகுமாம். பலரும் வீடுகளில் கதவுக்கு பின்னால் துணி அல்லது டவல், பை போன்ற பொருட்களை மாட்டி வைக்கக் கூடிய பழக்கம் உண்டு.
இது இடத்தை சேமித்து வைக்கக்கூடிய ஒரு மிகச் சிறந்த வழியாக தெரிந்தாலும் சாஸ்திர ரீதியாக இது ஒரு அபசகுன செயலாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு தொங்கவிடக்கூடிய பொருட்கள் வீட்டிற்கு வரக்கூடிய பாசிட்டிவ் எனர்ஜிகளை தடுத்து நமக்கு எதிர்மறை விளைவுகளை தருகிறது.
குறிப்பாக ஈரமான துணிகள், மருந்து பொருட்கள், கதவுக்கு பின்னால் மாட்டும் பொழுது நமக்கு மன அமைதியின்மையை கொடுக்கிறது.
இவ்வாறு செய்யும் பொழுது நமக்கு ராகு தோஷம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தடைகளை கொடுக்கக் கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |