நமக்கு கண் திருஷ்டி இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது ?
இந்த உலகில் நேர்மறை சக்திகள் என்று இருந்தால் எதிர்மறை சக்திகளும் இருக்கும். அப்படியாக, காலம் காலமாக மனிதர்கள் சந்திக்கும் இந்த கண் திருஷ்டி பலரையும் பல விதத்தில் பாதிப்படைய செய்கிறது. அதனால் தான் கிராமப்புறங்களில் சொல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்றார்கள்.
இந்த கண் திருஷ்டி அவ்வளவு மோசமானது என்றே சொல்லலாம். அந்த வகையில் ஒருவருக்கு கண் திருஷ்டி இருக்கிறது என்பதை எவ்வாறு தெறிந்து கொள்வது என்று பார்ப்போம். பொதுவாக ஒருவருக்கு கண் திருஷ்டி இருக்கிறது என்றால் அவருக்கு காரணமே இல்லாமல் உடல் அசதியாக இருக்கும்.
மனதில் ஒருவித பயமும் பதட்டமும் உண்டாகும். தன்னிலை இழந்து காணப்படும் சூழ்நிலை உருவாகும். மேலும், கண்ணாடியில் நம் முகத்தை நாம் தெளிவாக பார்க்க முடியாத நிலை இருக்கும். மிக முக்கியமாக நாம் மனிதர்களுடன் பழகுவதில் சில சங்கடங்கள் ஏற்படும்.
யார் மீதும் நம்பிக்கை இருக்காது. இதற்கு எல்லாம் ஒரு காரணம் கண் திருஷ்டியும். அதாவது கண் திருஷ்டியானது நம்மையும் சக மனிதர்களையும் வெறுப்படைய செய்து நம்மை திசை மாற செய்து விடும்.
அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் ஆதி காலங்களில் வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பும் பொழுது நாம் கை கால்களை முகங்களை கழுவிய பிறகே வீட்டிற்குள் வர வேண்டும் என்றனர். இவ்வாறு செய்யும் பொழுது நம் மீது விழுந்த தீய எண்ணங்களும் எதிர்மறை ஆற்றலும் விலகி சென்று விடும்.
அதோடு நம்முடைய வீடுகளிலும் தவறாமல் இரவு வேளைகளில் அனைவருக்கும் திருஷ்டி கழித்து போடும் நடைமுறைகளையும் வைத்திருந்தார்கள். அவ்வாறு நாம் செய்யும் பொழுது கண் திருஷ்டியில் இருந்து விலகியே நிற்கலாம்.
மேலும் கண் திருஷ்டியும் எதிர்மறை ஆற்றலும் நம்மை தாக்காமல் இருக்க நாம் எப்பொழுதும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். மன உறுதி இருந்தால் எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும் நம்மை நெருங்கவதில்லை. நம் மனம் சற்று பலம் இழந்து நிற்கும் பொழுது நம்மை கண் திருஷ்டியும் எதிர்மறை சக்திகளும் மிக எளிதாக தாக்கி விடுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |