இந்தியாவின் சிறப்பு வாய்ந்த கோயில்களும் அதன் பலன்களும்
உலகில் எப்படி ஒவ்வொரு கோயிலுக்கு பின்னாலும் ஒவ்வொரு வரலாறு இருக்கிறதோ.அப்படியாக அந்த கோயிலுக்கு செல்ல ஒவ்வொரு பலன்களும் நமக்கு கிடைக்கிறது.இப்பொழுது உலகில் பிரசித்தி பெற்று கோயில்களும் அங்கு சென்று நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றியும் பார்க்கலாம்.
திருப்பதி - செல்வம் சேரும்,திருப்பம் உண்டாகும்.
பத்ரிநாத், கேதர்நாத், அமர்நாத் - சிவனருள் கிடைக்கும்.
காசி, ராமேஸ்வரம், திருப்புவனம்(சிவகங்கை) - பிதுர் சாபம் தீரும்.
திருவெண்காடு(நாகப்பட்டினம்) - கல்வி, குழந்தைப் பேறு கிடைக்கும்.
திருவிடைமருதுார்(தஞ்சாவூர்), குணசீலம்(திருச்சி) - மனநலம் சிறக்கும்.
சோளிங்கர்(வேலுார்), திருக்கடையூர் - சுமங்கலி பாக்கியம், நீண்ட ஆயுள் பெருகும்.
திருமணஞ்சேரி - திருமணத்தடை நீங்கும்.
வைத்தீஸ்வரன்கோவில் - நோய் மறையும்.
திருநாகேஸ்வரம், நாகர்கோவில் - ராகு தோஷம் விலகும்.
புன்னைநல்லுார், பண்ணாரி - குடும்பப் பிரச்னை தீரும்.
சமயபுரம் - மாங்கல்ய தோஷம் நீங்கும்.
திருநள்ளாறு - சனிதோஷம், துன்பம் அகலும்.
பாபநாசம்(திருநெல்வேலி) - முன்வினை பாவம் தீரும்.
திருவண்ணாமலை - மனவலிமை பெருகும், நினைத்தது நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |