ஏன் ஒருவர் பகவத் கீதை படிக்க வேண்டும்?

By Sakthi Raj Jul 30, 2024 10:00 AM GMT
Report

வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள விருப்பமா?மனம் குழப்பம் அடைகிறதா?அப்பொழுது ஒருவர் கட்டாயம் படிக்கச் வேண்டியது பகவத் கீதை.

அதை படிப்பதினால் நமக்கு என்ன மாற்றம் நடக்கும் என்றால் வரும் துன்பத்தையும் இன்பத்தையும் மனதார ஏற்றுக்கொள்ளுவோம்.காரணம் காரியம் இல்லாமல் உலகில் எதுவும் நடப்பதில்லை என்று புரிந்து செயல்படுவோம்.

மனிதனாக பிறந்த நம் கடமையை சரியாக செய்துமுடிப்போம்.அப்படியாக பகவத் கீதையில் படித்து நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 8 விஷயங்களை பற்றி பார்ப்போம்.

ஏன் ஒருவர் பகவத் கீதை படிக்க வேண்டும்? | Important To Read Bagavat Geetai

1. எதுவும் நிரந்தரம் இல்லை

உடல் வேறு உயிர் வேறு.இந்த உலகில் எல்லாமே நிரந்தரமற்றது.இன்று நாம் கொண்டாடும் எதுவும் நீண்ட காலம் நிலைத்து இருக்கப்போவது இல்லை.அப்படியே இருந்தாலும் அதன் முடிவும் விதியும் யாரும் அறிவது இல்லை.அப்படியாக எதன் மீதும் பற்று வைப்பது நமக்கு துன்பமே.உலகில் எல்லாம் சில காலங்களே.

2. செயலற்று இருப்பது முட்டாள் தனம்

எழுதப்பட்டுள்ள உலகக் கடமைகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒருவர் ஏமாற்றப்படுவார். தனது பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்காமல், ஒருவர் செயலாற்றும் போது உண்மையான விடுதலை சாத்தியமாகிறது.

3. முடிவு பற்றி கவலைப்படாத கடின உழைப்பு வேண்டும்

முடிவைப் பற்றிய கவலைகளை ஒதுக்கி வைக்கும் போது, நீங்கள் கடினமாக உழைக்க முடியும் மற்றும், விளைவின் தன்மை குறித்த கவலை இல்லாமல் சந்தோஷமாக இருக்க முடியும்.

ஏன் ஒருவர் பகவத் கீதை படிக்க வேண்டும்? | Important To Read Bagavat Geetai

4. ஆசையை வெல்லுங்கள்

ஒரு ஸ்திரமான மனதாலேயே ஆசையின் தன்மை மற்றும் அமைப்பை புரிந்து கொள்ள முடியும். மேலும், இது ஆசையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக இருக்கும்.

5. சுயநலம் உங்கள் ஞானத்தை மறைக்கும்

மனமானது சுயநலத்தில் அமிழ்ந்து இருப்பது, ஒரு கண்ணாடியானது மூடுபனி அல்லது தூசியால் மூடப்பட்டிருப்பதற்கு ஒப்பானதாகும். சுயநலத்தை ஒதுக்கி வைக்கும் போது மனதில் தெளிவு, நம்பிக்கை நிலவுகிறது.

இரட்டை முக பைரவர் மர்மங்கள் நிறைந்த சுகந்தவனேஸ்வரர் ஆலயம்

இரட்டை முக பைரவர் மர்மங்கள் நிறைந்த சுகந்தவனேஸ்வரர் ஆலயம்


6. சமநிலைத்தன்மை வேண்டும்

மிக அதிகமான அல்லது மிக குறைவான எதுவும், வாழ்கையில் சமநிலையற்றத் தன்மையை உருவாக்கும். எனவே உணவு, தூக்கம், உடல் இன்பம் எதுவாயினும் சமநிலை அவசியம்.

7. சினம் உங்களை வஞ்சிக்கும்

கோபம் உங்களை குழப்பமடையச் செய்யும். கோபத்துடன் செய்யும் செயல்கள் பயனற்றுப் போகும். ஒருவர் கோபமாக இருக்கும் போது மனமானது, தர்க்கம் மற்றும் காரணங்களை இழக்கிறது. சினம் ஒரு மிகப்பெரிய மனிதரைக் கூட வீழ்த்தும்.

8. கடவுள் உங்களுக்குள்ளே இருக்கிறார்

ஒரு உச்ச சக்தியானது பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களிலும் உள்ளது. மனிதன் இதில் ஒரு சிறிய துண்டு ஆவான்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US