செல்வம் நிலைத்து நிற்க செய்யவேண்டிய எளிய பரிகாரம்

By Sakthi Raj Oct 06, 2024 09:57 AM GMT
Report

வாழ்க்கை நிலையற்றது என்றாலும் வாழும் காலத்தில் நமக்கு முக முக்கியமாக தேவை படுகின்ற ஒரு விஷயம் பணம்.சிலருக்கு இந்த செல்வம் ஆனது கையில் தங்குவதே இல்லை.வருவதும் தெரியாது போவதும் தெரியாது போல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

அவர்கள் எல்லாம் ஒரு சிறிய எளிய பரிகாரம் செய்ய வாழ்க்கையில் செல்வம் சேர்ந்து வளர்ச்சி உண்டாகும். நம்முடைய இந்துமதத்தில் பசு மற்றும் கன்றை மஹாலக்ஷ்மியின் அம்சமாக பாவித்து வழிபாடு செய்வோம்.

கிரக தோஷங்களை நிவர்த்தி செய்ய நாம் செல்ல வேண்டிய ஆலயம்

கிரக தோஷங்களை நிவர்த்தி செய்ய நாம் செல்ல வேண்டிய ஆலயம்


எவர் ஒருவர் தினமும் கோபூஜை செய்கின்றாரோ அவர் மகா விஷ்ணுவின் பரிபூர்ண அருளை பெற்று வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெருகிறார்கள். மேலும் நல்வாழ்வு அமைந்து வாழ்க்கையில் சகல சவுபாக்கியத்தை பெற வருடம் ஒருமுறையாவது கோ பூஜையை செய்து வரவேண்டும்.

செல்வம் நிலைத்து நிற்க செய்யவேண்டிய எளிய பரிகாரம் | Ko Poojai Palangalum Parigarangalum

மிக முக்கியமாக புண்ணிய நதிகள், சமுத்திரங்கள் பசுவின் உடலில் இருப்பதால் பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வலம் வந்து வணங்கிய பலன் கிடைக்கிறது. அதை விட சிறந்ததாக பசுவை அதிகாலையில் பார்ப்பதும், வணங்குவதும் புண்ணியமாகும்.பசு வழிப்பாட்டில் தாயைக் கன்றுடன் சேர்த்தே பூஜிக்க வேண்டும்.

நீண்ட குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பசுவிற்கு உணவு கொடுத்து வர அவர்களுக்கு உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

செல்வம் நிலைத்து நிற்க செய்யவேண்டிய எளிய பரிகாரம் | Ko Poojai Palangalum Parigarangalum

வீட்டில் பசு இல்லாதவர் அன்றாடமும் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்கீரையோ, பிற தீவனமோ கொடுக்க வேண்டும்.

கிருஷ்ணர் பசுக்களில் நான் காமதேனு என்கிறான் பகவான் கீதையில். அந்தப் பசுவை கன்றுடன் பூஜித்து பகவானின் பரிபூர்ண அருளையும் வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வத்தையும் பெறுவோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US