செல்வம் சேர வியாழன் குபேர விளக்கு வழிபாடு
செல்வம் என்பது மக்களின் மிக முக்கிய தேவை.அந்த செல்வத்திற்கு அதிபதியான குபேரனை வழிபாடு செய்ய நம்முடைய வீட்டில் உள்ள பண தடங்கல் விலகி வாழ்க்கை மேம்படும்.அப்படியாக அந்த குபேரனின் அருளை பெற சில பரிகாரங்கள் செய்யவேண்டும்.அதை பற்றி பார்ப்போம்.
குபேரருக்கு விருப்பமான வியாழக்கிழமை அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.பிறகு அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த குபேர விளக்கை ஏற்றி பூஜை செய்யவேண்டும்.
விளக்கு ஏற்றும் போது வீட்டினுள், வாசலின் முன் நின்றபடி, நமது இடது புறத்தில், ஒரு மரப்பலகை அல்லது தட்டி நன்றாக சுத்தம் செய்த குபேர விளக்கை வைக்கவும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை எடுத்து, ஒன்றாக சேர்த்து ஒரு திரியாக்கி குபேர விளக்கில் போடவும்.
பின்னர் வீட்டில் எப்போதும் வீட்டில் விளக்கேற்றும் பூஜை அறையில் விளக்கேற்றிய உடன், குபேர விளக்கிலும் தீபத்தை ஏற்ற வேண்டும்.இந்த குபேர விளக்கை தினமும் பூஜை அறையில் ஏற்றி வரலாம். குபேரருக்கு உகந்த திசை வடக்கு.
ஆகையால் பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி ஏற்றவேண்டும்.குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குபேர திரியினால் அதாவது குபேரருக்கு உகந்த நிறம் பச்சை. அதனால் பச்சை நிறத்தில் உள்ள திரியால் குபேர விளக்கு ஏற்றினால் மிகவும் சிறந்த பயனளிக்கும்.
பச்சை நிற தரி இல்லை எனில் பஞ்சு திரி வைத்தும் விளக்கு ஏற்றலாம். குபேர விளக்கில் ஐந்து கற்கண்டு சேர்க்கவேண்டும். கற்கண்டு சேர்ப்பதனால் பணவரவு அதிகரிக்கும்.மேலும் இந்த குபேர விளக்கு ஏற்றும் பொழுது குபேர காயத்திரி மந்திரம் சொல்லி வர வீட்டில் உள்ள பண கஷ்டம் எல்லாம் விலகும்.
குபேரன் காயத்ரி மந்திரம் குபேர தீபத்தை குபேரன் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டே ஏற்றலாம்.
ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி!
தந்நோ குபேர ப்ரசோதயாத்
இவ்வாறு ஒவ்வொரு வியாழன் அன்று குபேரருக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வீட்டில் நல்லதொரு மாற்றம் தெரிவதோடு பண கஷ்டம் படிப்படியாக குறைவதை பார்க்கமுடியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |