மனச்சோர்வில் இருந்து உடனடியாக விடுதலை கொடுக்கும் கந்த குரு கவசம்

By Sakthi Raj Apr 23, 2026 06:46 AM GMT
Report

மனிதர்களின் மனநிலையானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திலும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. ஆக நம்முடைய மனமானதை நாம் தான் எப்பொழுதும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

அதாவது, இந்த உலகத்தைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு புரிதல் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாம் பேசி பழகி இந்த உலகத்தில் வாழ்தல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆக, சரியான புரிதல் இல்லாமல் நாம் அவ்வப்போது சில சிக்கல்களிலும் கஷ்டங்களிலும் மாட்டிக்கொள்வது உண்டு.

அந்த நேரத்தில் நம்முடைய மனமானது மிகப்பெரிய அளவில் துன்பத்தை சந்தித்து விடும். நம்முடைய அறிவானது நல்லதே சொன்னாலும் சமயங்களில் மனமானது அதை ஏற்றுக் கொள்வதில்லை.

அப்படியாக உங்களுக்கு எதிரிகளால் தொல்லை அல்லது தேவையில்லாத மனச்சோர்வுகள் குடும்பத்தில் பிரச்சனை, கடன் தொல்லை வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை என்ற ஏக்கம் என்று நீங்கள் மனம் சோர்ந்து போகும் பொழுது முருகப்பெருமானுடைய இந்த கந்த குரு கவசத்தை நீங்கள் பாராயணம் செய்து பாருங்கள் நிச்சயம் எதற்காக நீங்கள் மனம் வருந்தி கொண்டு இருந்தீர்கள் என்பதை மறந்து மனம் உற்சாகமடைந்துவிடும்.

அதேபோல் நீங்கள் நினைத்த காரியமும் உங்களுக்கு கைகூடிவரும் மனதில் வலிமை பிறக்கும்.

மனச்சோர்வில் இருந்து உடனடியாக விடுதலை கொடுக்கும் கந்த குரு கவசம் | Lord Murugan Kantha Guru Kavasam Mantras

ஜோதிடம்: 2026 ஆம் ஆண்டில் கட்டாயம் இவை எல்லாம் நடக்குமாம்

ஜோதிடம்: 2026 ஆம் ஆண்டில் கட்டாயம் இவை எல்லாம் நடக்குமாம்

கந்த குரு கவசம்: 

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
முஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5)
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.
செய்யுள்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10)
குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15)
அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... (20)
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... (25)
தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... (30)
ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... (35)
தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... (40)
அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... (45)
பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... (50)
அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... (55)
குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... (60)
வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... (65)
கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... (70)
ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை
நீ எனக்கு பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... (75)
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... (80)
அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... (85)

2026 குரு பெயர்ச்சி? ஹம்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெரும் ராசிகள்

2026 குரு பெயர்ச்சி? ஹம்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெரும் ராசிகள்

 மனம் சோர்வடையும் பொழுது அந்த சோர்வில் மட்டுமே கவனம் செலுத்தாமல் உடனடியாக இறைவனை நோக்கி நம்மை திசை திருப்பினால் நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும். ஆக, நீங்கள் ஏதேனும் ஒரு நேரத்தில் தடுமாறுவது போல் எண்ணினால் உடனடியாக ஒரு இடத்தில் அமர்ந்து இந்த கந்த குரு கவசத்தை பாராயணம் செய்து பாருங்கள் கட்டாயம் 30 நிமிடம் முன்பு வரை எதற்காக நீங்கள் மனம் வருந்தி கொண்டிருந்தீர்கள் என்பதை மறந்து மனம் புத்துணர்ச்சி அடையும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US