12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட மூலிகைகள் என்ன தெரியுமா?

By Sakthi Raj Apr 03, 2026 01:00 PM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் இருக்கிறது. அப்படியாக 12 ராசிகளுக்கும் உரிய அதிர்ஷ்ட மூலிகைகள் என்னவென்று பார்ப்போம்.

சனி பகவானை விடவும் மிகவும் மோசமான கிரகம் எது தெரியுமா?

சனி பகவானை விடவும் மிகவும் மோசமான கிரகம் எது தெரியுமா?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக கருந்துளசி இருக்கிறது. இவர்கள் செவ்வாய்க்கிழமை துளசி இலைகளை தண்ணீரில் போட்டு முகம் கழுவி வரும்பொழுது இவர்களுடைய கோபம் குறைகிறது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக வெட்டிவேர் இருக்கிறது. இவர்கள் வெட்டிவேர் தண்ணீர் குடித்து வரும் பொழுது வீண் செலவு குறைந்து பொருளாதாரம் நிலைத்து இருக்கிறது.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக பிரம்மி இலை இருக்கிறது. இவர்கள் எழுதும் மேசையில் பிரம்மி பொடி வைத்தால் பேச்சாற்றல் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக அருகம்புல் இருக்கிறது. இவர்கள் திங்கட்கிழமை காலை அருகம்புல் தண்ணீரை தலைக்கு தெளித்து வந்தால் மனதில் இருக்கக்கூடிய பயம் விலகும்.

12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட மூலிகைகள் என்ன தெரியுமா? | Lucky Herbs According 12 Zodiac

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக எருக்கு இருக்கிறது. இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று எருக்கு இலை வழிபாடு செய்தால் சமுதாயத்தில் மரியாதையும் பதவி உயர்வும் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மூலிகையாக கீழாநெல்லி இருக்கிறது. இவர்கள் வாரம் இரண்டு முறை கீழாநெல்லி சாறு எடுத்து வர உடல் மற்றும் வேலை இவை இரண்டும் சீராகும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக சந்தனம் இருக்கிறது. இவர்கள் வெள்ளிக்கிழமை சந்தனம் நெற்றியில் வைத்து வரும் பொழுது உறவில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் விலகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக வசம்பு இருக்கிறது. இவர்கள் வசம்பை தலையணை அருகில் வைத்தால் எதிரி பயம் மற்றும் தடைகள் யாவும் விலகும்.

இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்களாம்

இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்களாம்

தனுசு:

தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட மூலிகையாக வில்வம் இருக்கிறது. இவர்கள் வியாழன் அன்று வில்வ இலை கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்தால் அதிர்ஷ்ட பலன் கொடுக்கிறது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மூலிகையாக கரிசிலாங்கண்ணி இருக்கிறது. இவர்கள் கரிசலாங்கண்ணிக் கீரை வாரம் ஒரு முறை எடுத்து வரும் பொழுது சனி தோஷம் நீங்குகிறது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட மூலிகையாக தூதுவளை இருக்கிறது. இவர்கள் தூதுவளை கசாயம் குடித்து வரும் பொழுது திடீர் நோய் மற்றும் தடைகள் யாவும் விலகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட மூலிகையாக தாமரை விதை அல்லது இலை இருக்கிறது. இவர்கள் வெள்ளிக்கிழமை தாமரை இலை கொண்டு பெருமாளை வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US