புதுச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் மாங்கனித் திருவிழா
புதுச்சேரி காந்தி வீதியில் நூறாண்டுகள் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்கிறது வேதபுரீஸ்வரர் ஆலயம்.
இவ்வாலயத்தில் 63 நாயன்மார்களுக்கும் சன்னதி உள்ளது. இங்கு நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் வீற்றிருக்கிறார்.
ஆண்டுதோறும் புதுவையில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்திலும் மாங்கனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சிறுத்தொண்ட நாயனார் திருதொண்டு சபை சார்பில் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு மாங்கனி திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி வேதபுரீஸ்வரர் திரிபுரசுந்தரி மற்றும் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பின்பு மாங்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காரைக்கால் அம்மையார் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தார்.
அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் தேரை வருடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |