இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும் முருகனின் ஒரு வரி மந்திரம்
சிவபெருமானின் தவ புதல்வன் முருகப்பெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர்.அவரிடம் யாரும் எளிதில் நெருங்க முடியாது.
அப்படியே நெருங்கினாலும் அவர் அருட்பார்வை இன்றி அவரை அணுகமுடியாது என்பது உண்மை.
அதாவது இறைவனால் தான் நம்முடைய பிறப்பு.அவனை நினைக்கவே அவன் அருள் பெறவே அவனின் ஆசிர்வாதம் மிக அவசியம்.
அப்படிதான் முருகப்பெருமான் அவரை நெருங்கி முருகா என்று அழைத்திட அனைத்து துன்பமும் நம்மை விட்டு விலகும்.
என்னதான் கண்களை முடி இறைவனை வணங்கினாலும் அவன் சன்னதிக்கு சென்று தரிசித்தாலும் அவனின் மந்திரம் சொல்லி வழிபட நம்முடைய கோரிக்கை உடனே நிறைவேறும்.
அப்படியாக இன்னல்கள் வரும் பொழுது முருகப்பெருமானின் எளிதான ஒருவரி மந்திரம் சொல்ல முருகன் நம்மை காத்தருள்வார்.
மேலும் நமக்கு ஏதாவது ஒரு வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்னும் பட்சத்தில் இந்த மந்திரத்தை தினமும் ஆறு முறை கூறி வர அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.
தொடர்ந்து 48 நாட்கள் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பதும் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றும்.
“ஓம் நமோ குமாராய நம”
மிகவும் எளிமையான எல்லோருக்கும் மனதில் நினைவு இருக்கும் படி இந்த மந்திரம் இருப்பதால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மந்திரத்தை நாம் நினைவில் வைத்து கொண்டு முருகனை வழிபடலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |