ஜாதக தோஷங்களை போக்கும் சிங்க பெருமாள் நரசிம்மன் கோவில்

By Sakthi Raj May 28, 2024 10:30 AM GMT
Report

திருவேளுக்கை ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமான ஸ்தலமாக சிங்க பெருமாள் நரசிம்மன் கோவில் திரு ஸ்தலம் அமைந்துள்ளது.

எனவே இது திருவேளுக்கை சிங்க பெருமாள் நரசிம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.அவ்வளவிற்கு முக்கியமான ஸ்தலமாக இது இருப்பதற்கு காரணம் ஸ்ரீ நரசிம்ம அவதாரத்திற்கும் இந்த திருக்கோயிலுக்கும் இடையே உள்ள தொடர்பே ஆகும்.

ஜாதக தோஷங்களை போக்கும் சிங்க பெருமாள் நரசிம்மன் கோவில் | Narasimar Vazhipadu Singaperummal Koyil Chennai

இரணியனை வதம் செய்ய பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தப்போது அது மிகவும் உக்கிரமான அவதாரமாயிற்று.

இரணியனை வதம் செய்த பிறகும் கூட கோபம் தணியாத நரசிம்மரை அங்கிருந்த அசுர கூட்டம் துரத்த துவங்கியது.

கல்வியில் முன்னேறவும், ஞானம் பெறவும் கணபதி ஹோமம்

கல்வியில் முன்னேறவும், ஞானம் பெறவும் கணபதி ஹோமம்


அப்போது வந்த நரசிம்மன் இந்த இடத்தின் இயற்கை எழிலை கண்டு மயங்கி சாந்தமானார். அங்கேயே யோக நரசிம்மராகி அமர்ந்துவிட்டார். இதனால் இந்த தலம் நரசிம்மருக்கான முக்கியமான திருத்தலமானது.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் காலை 7 முதல் 11 மணிவரையிலும், மாலை 5 முதல் 7.30 மணி வரையிலும் திறப்பு நேரமாக உள்ளது.

ஜாதக தோஷங்களை போக்கும் சிங்க பெருமாள் நரசிம்மன் கோவில் | Narasimar Vazhipadu Singaperummal Koyil Chennai

இங்கு நடக்கும் பிரதோஷ வழிபாட்டில் கலந்துக்கொள்பவர்கள் நரசிம்ம ஸ்தோத்திரங்கள் செய்து வழிபட்டால் அவர்களுக்கு கிரக தோஷங்கள், பில்லி சூனியம், போன்ற கோளாறுகள் நீங்கும் என்பது ஐதீகம்.

அதே போல அமாவாசை தினங்களில் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அதை பக்தர்கள் மீது தெளிக்கின்றனர். இதனால் சகல தோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது.

நரசிம்மர் சந்நிதிக்கு எதிராக ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சந்நிதி அமைந்துள்ளது. திருமணம் தொடர்பான தடைகள் மற்றும் பரிகாரங்களுக்கு இந்த தளத்தை நாடுகின்றனர் பக்தகோடிகள்.

நரசிம்மன் கோவில், சிங்க பெருமாள் நரசிம்மன் கோவில், ஜாதக தோஷம் போக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US