இந்த எட்டு பொருட்கள் வீட்டில் இருந்தால் பண கஷ்டமே வராது

By Sakthi Raj Jul 14, 2024 07:53 AM GMT
Report

மனிதன் சந்தோஷமாக வாழ இயற்கை பல வழிமுறைகளை நமக்கு வகுத்து கொடுத்து இருக்கிறது.அதாவது நம் வாழ்க்கை மேம்பட நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்துக்குமே இறைவன் பதில்களை நம்மை சுற்றியே வைத்து இருக்கின்றான்.

என்னதான் வாழ்க்கையை புரிந்து சந்தோஷமாக வாழ்ந்தாலும் நடைமுறைக்கு பணம் மிக அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

அந்த பணத்தை நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேகரிக்க வேண்டும் என்று நினைத்தாலும் பல தடைகள் செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.

இந்த எட்டு பொருட்கள் வீட்டில் இருந்தால் பண கஷ்டமே வராது | Pana Kashtam Theerkum Yettu Porutkal

இன்னும் சொல்ல போனால் வந்த பணம் போன இடம் தெரியாத அளவிற்கு வீட்டில் பஞ்சம் கூட ஏற்பட்டு விடும். அந்த பண கஷ்டத்தை தவிர்க்க நாம் என்ன செய்யவேண்டும்.

மேலும் நாம் வீடுகளில் சில பொருட்கள் இருந்தால் நம்முடைய பண கஷ்டம் தீரும் என்று சொல்லப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.

அஷ்டமி நவமியில் நல்ல காரியங்கள் செய்யலாமா?

அஷ்டமி நவமியில் நல்ல காரியங்கள் செய்யலாமா?


வீட்டில் பண கஷ்டம் தீர வீட்டில் இந்த எட்டு பொருட்கள் இருந்தால் போதும் என்கின்றனர்.அந்த எட்டு பொருட்கள் என்னவென்றால் வெட்டிவேர், குண்டு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் தூள், கோரோசனை பொடி, அகில் கட்டை, திரவிய பட்டை, ஜாதிபத்திரி, ஜவ்வாது ஆகும்.

இந்த எட்டு பொருட்கள் வீட்டில் இருந்தால் பண கஷ்டமே வராது | Pana Kashtam Theerkum Yettu Porutkal

இந்த எட்டு பொருட்களையும் ஒன்றாக வாங்கி வைத்து மஞ்சள் துணியில் கட்டி பூஜை அறையிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ வைக்க வேண்டும்.

பிறகு தினமும் தீபம் ஏற்றி அதற்கு தூபம் காண்பிக்க வேண்டும்.அப்படி செய்யும் பொழுது வீட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் சரிசெய்து நாம் வீட்டில் உள்ள பணத்தட்டுப்பாடுகளை குறைக்கிறது என்கின்றனர்.

மேலும் இந்த மஞ்சள் துணியில் வைத்த அந்த எட்டு பொருட்களின் வாசமும் போன பிறகு அதில் உள்ள பொருட்களை மாற்றி மீண்டும் புது பொருட்கள் கொண்டு நிரப்பலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US