இந்த 1, 10, 19, 28 தேதியில் பிறந்தவர்கள் முடிவெடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, எண் கணிதம் கொண்டும் நாம் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை குணநலன்கள், தொழில் என்று எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் குறிப்பிட்ட தேதியில் பிறந்த நபர்கள் முடிவு எடுப்பது வல்லவர்களாக இருப்பார்கள். எதையும் தீர ஆராய்ந்து செய்யக்கூடியவர்களாக இருப்பார்களாம். அதற்கு காரணம் அந்த எண்ணை ஆளக்கூடிய கிரகங்களின் ஆதிக்கம் தான் காரணம்.
அப்படியாக 1, 4, 8, 10, 13, 17, 22, 26, 28, 31ஆகிய தேதியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதாவது 1, 10, 19, 28 ஆகிய தேதியை ஆளக்கூடிய கிரகமாக சூரிய பகவான் இருக்கிறார். சூரிய பகவான் தான் ஒரு மனிதனுக்கு தலைமைத்துவ பண்பை வழங்க கூடியவராக இருக்கிறார்.

ஆக, இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாகவும் அதை பற்றி நன்கு ஆராய்ந்து பிறகு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள், அதேபோல் 4, 13, 22, 31இந்த தேதியில் பிறந்தவர்கள் ராகு பகவானின் ஆதிக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ராகு பகவான் அதிகமாக சிந்திக்க கூடிய ஆற்றலைக் கொடுக்கிறார். அதாவது சாமர்த்தியமாக சிந்திக்கக் கூடிய திறனால் இந்த தேதியில் பிறந்த நபர்கள் எந்த வம்பு வழக்குகளிலும் சிக்காமல் அவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள்.

மேலும், 8, 17, 26 இந்த தேதியில் பிறந்தவர்கள் சன்பகவானின் ஆதிக்கத்தை கொண்டவர்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் ஒழுக்கத்தை விரும்புபவர்கள். ஆதலால் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் கட்டுக்கோப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதைவிட முக்கியமாக ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பாக அதை நன்கு ஆராய்ந்து எடுக்கக்கூடிய பக்குவத்தை கொண்டிருக்கிறார்கள். அதே போல் பிற கிரகங்களுடைய தாக்குதலை கொண்ட எண்ணில் பிறந்தவர்களும் அந்த கிரகங்களுக்குரிய நன்மைகளைப் பெற்று அவர்களும் தனித்துவமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |