பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ளனர்.
பக்தர்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்கள் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |