ராகு கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்.. இந்த ராசிகளுக்கு இனி ராஜ யோகம் தான்
2026 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரை கிரகங்களின் மாற்றமானது மிகப்பெரிய அளவில் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உருவாக்குகிறது. அதாவது ராகு மற்றும் கேது இடையே அனைத்து கிரகங்களும் பயணிக்கும் பொழுது காலசர்ப் யோகம் உருவாகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டமான வாழ்க்கையும் தொழில் முன்னேற்றமும் பெறப்போகிறார்கள். அவர்கள் எந்த ராசிினர் என்று பார்ப்போம்.

மேஷம் :
மேஷ ராசியினருக்கு இந்த கால சர்ப்ப யோகமானது இவர்களுக்கு வருமானத்தை உயர்த்துவதற்கான வழி வகைகளை கொடுக்கப் போகிறது. நீண்ட நாள் செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போகிறீர்கள். புதிய முயற்சிகள் கைகூடி வரப்போகிறது. இக்கட்டான நிலையும் சமாளிக்க பழகிக் கொள்வீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த கால சர்ப்பம் யோகமானது இவர்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு சம்பள உயர்வும், வேலையில் நீண்ட நாள் கிடைக்காத அங்கீகாரம் கிடைக்கப்போகிறது. இந்த காலகட்டங்களில் வேலை இல்லாதவர்களுக்கும் நினைத்த இடத்தில் வேலை பெறப்போகிறார்கள்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு கால சர்ப்பம் யோகமானது இவர்கள் எடுக்கும் முயற்சிகளில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறப் போகிறார்கள். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும். வியாபார ரீதியாக நீங்கள் முதலீடு செய்ய விருப்பம் கொள்வீர்கள். சமுதாயத்தில் இழந்த மதிப்பை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் யோகம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |