பணவசியம் உண்டாக்கும் செம்பருத்தி பூ ரகசியம்.. ஒரு வாரத்தில் மாற்றத்தை காணலாம்
இந்த உலகில் அன்றாட தேவையாக முதலில் உணவு இருக்கிறது. அந்த உணவை நாம் பெற்றுக்கொள்ள பணம் மிகவும் அவசியமாக இருக்கிறது. அப்படியாக ஒருவருக்கு நிலையான செல்வம் கிடைக்க வேண்டும் என்றால் கடின உழைப்பு எவ்வளவு அவசியமோ அதற்கு ஈடாக இறைவனுடைய அருளும் அவசியம்.
அதாவது செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய மகாலட்சுமி தேவியின் பரிபூரண அருள் கிடைத்துவிட்டால் பணத்திற்கு தட்டுப்பாடு இருக்காது. அப்படியாக ஒருவர் வீடுகளில் பண வசியம் உண்டாக செய்ய வேண்டிய எளிய வழிபாடு பற்றி பார்ப்போம்.

பொதுவாக வீடுகளில் வளர்க்கக்கூடிய செம்பருத்தி செடி அழகு சேர்ப்பதோடு சேர்ந்து நமக்கு பல நன்மைகளையும் அவை கொடுக்கிறது. அதாவது இந்த செம்பருத்தி பூவை கொண்டு தான் நாம் பண வசியம் செய்யக்கூடிய திலகத்தை தயாரிக்கப் போகின்றோம்.
குறிப்பாக பூவின் உள்ளே இருக்கக்கூடிய மகரந்தத்திற்கு அற்புதமான செம்பருத்தி பூவின் நடுவே இருக்க கூடிய காம்பை லேசாக உரசினால் கிடைக்கக்கூடிய அந்த மகரந்தத்தை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அந்த மகரந்தத்துடன் சிறிதளவு அரகஜா சேர்ந்து நன்றாக கலந்து மை போல் தயார் செய்து கொள்ள வேண்டும்.
இந்த மையை வீடுகளில் இருக்கக்கூடிய பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதார வேண்டிக் தினமும் நெற்றியில் வைத்து வர பண வசியம் உண்டாகும், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |