சந்திரன் பெயர்ச்சியால் ராஜ வாழ்க்கை வாழ போகும் 3 ராசிகள் யார்?

By Sakthi Raj Feb 15, 2025 08:55 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்களும் ஒவ்வொரு குணாதிசியங்களை கொண்டது.கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் இடையிலான உறவு ஒரு நபரின் வாழ்க்கையை பாதிக்கிறது.ஒன்பது கிரகங்களில், ராசிகள் மற்றும் நட்சத்திரங்களை வேகமாக மாற்றுவதற்கு பெயர் பெற்றது சந்திரன்.

இரண்டரை நாட்களுக்குப் பிறகு சந்திரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்கிறது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 15), புதன் கன்னி ராசியில் நுழைகிறார். அப்படியாக சந்திரன் கன்னி ராசியில் இன்று (பிப்ரவரி 15) சனிக்கிழமை காலை 5:44 மணிக்கு சந்திரன் தனது ராசியை மாற்றுகிறார்.

அதாவது, சிம்ம ராசியை விட்டு வெளியேறி கன்னி ராசிக்குள் நுழைகிறார்.இதனால் மூன்று ராசிகளுக்கு ராஜா வாழ்க்கை வாழ போகிறார்கள்.அவர்கள் யார் என்று பார்ப்போம்.

திருமண வரம் அருளும் வயலூர் முருகன்

திருமண வரம் அருளும் வயலூர் முருகன்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை சந்திக்க போகிறார்கள்.வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட சிக்கல் முற்றுலுமாக விலகும்.அலுவலகத்தில் உங்களுக்கு உண்டான பிரச்சனைகள் படி படியாக குறையும்.சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும்,சம்பள உயர்வும் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் பெயர்ச்சி மிக பெரிய நன்மைகள் கொடுக்கும்.சிலருக்கு இறைவழிபாட்டால் மிக பெரிய நன்மைகள் நடக்கும்.திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.மனதில் நல்ல தெளிவும் மகிழ்ச்சியும் உண்டாகும்.பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் பெயர்ச்சி அவர்களுக்கு மிக சாதகமாக அமைய போகிறது.சமுதாயத்தில் நல்ல முன்னேற்றம் அமையும்.மனதில் அசைக்க முடியாத தைரியமும் நம்பிக்கையும் பிறக்கும்.குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவு செய்வீர்கள்.நெருங்க உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US