பக்தர்களின் துயர் துடைக்கும் சிறுவாபுரி முருகன்- ஒருமுறை சென்றாலே மாற்றங்களை காணலாம்
முருகன் அவன் பக்தர்களை காப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர். எவர் ஒருவர் முருகா என்று அழுது வணங்குகிறார்களோ அவர்களை முருகர் கைவிடுவதில்லை. அப்படியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் ஆலயம் தான் இந்த சிறுவாபுரி முருகன் ஆலயம்.
வாழ்க்கையில் தடைகளை சந்திக்கும் அனைவரும் ஒருமுறை இந்த ஆலயம் சென்று வழிபாடு செய்து வர முருகன் அருளால் அவர்கள் வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றத்தை பெறுவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, திருமண வயது வந்தும் திருமண தடையை சந்திப்பவர்கள் இங்கு சென்று முருகனை வழிபாடு செய்தால் அவர்களுக்கு திருமணத்தில் ஏற்பட்ட தோஷங்கள் விலகி விரைவில் முருகன் அருளால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
மேலும், இந்த சிறுவாபுரி முருகன் ஆலயம் சென்று தங்கள் வாழ்க்கையில் அதிசயங்களை சந்தித்தவர்கள் ஏராளம். அந்த வகையில் சிறுவாபுரி முருகன் ஆலயம் வரும் பக்தர்கள் முருகன் அருளால் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த அதிசயங்கள் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். அவை கேட்பதற்கே மெய் சிலிர்க்க செய்கிறது.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |