உங்களுக்கு ஆன்மீக அறிவு பற்றி தெரியுமா?

By வாலறிவன் Jul 23, 2024 08:30 AM GMT
Report

அறிவு என்றால் என்ன? ஆரம்ப கால பாடத்தில் வரும் ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை இது எல்லோரும் அறிந்ததே, ஆறறிவு மனிதனுக்கு மட்டுமே உண்டு, அதை கொண்டு நாம் செய்வது என்ன என்பதை பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.

மனிதன் பிறந்தது முதல் அவன் அறிவும் Update ஆகும் என்று கூறினால் நான் கூறுவது உங்கள் கல்வி முறையையோ வாழ்க்கை பற்றின புரிதலையோ, அனுபவத்தையோ அல்ல ஆன்மிக அறிவு என்று ஒன்று உள்ளது.

இதை தான் வள்ளுவர் "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்" என்று கூறினார்., ஒருவரின் குணங்கள் எப்படிப் பட்டவை.

உங்களுக்கு ஆன்மீக அறிவு பற்றி தெரியுமா? | Spiritual Thoughts Aanmeegam Knowledge Worship

அவரிடம் எந்த மாதிரி குணம் அதிகம் உள்ளது, மற்றும் அவரின் குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதை கண்டுபிடித்து அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும் என்பது.

வள்ளுவன் வாக்கு ஒன்றை அளிக்க வேண்டும் என்றால் ஒரு கருவியோ அல்லது ஒப்பிடோ இருக்க வேண்டும் அல்லவா,

எதை வைத்து ஒருவரின் Character ஐ அளப்பது? இந்த கேள்விக்கான பதில் அவரின் அறிவு வளர்ச்சியின் அடிப்படையை கொண்டு அளக்க வேண்டும் என்பதே ஆகும்.

இந்த அறிவு 4 வகைப்படும். உலகில் நீங்கள் பார்க்கும் பழகும் அத்தனை பேரையும் இந்த 4 நிலைகளில் அடக்கிவிடலாம்.

1 - இந்திரிய அறிவு

2 - புலனறிவு

3 - மன அறிவு

4 - உயிர் அறிவு

உங்களுக்கு ஆன்மீக அறிவு பற்றி தெரியுமா? | Spiritual Thoughts Aanmeegam Knowledge Worship

இந்த 4 வகையும் எல்லோரிடமும் இருக்கும். ஆனால் அளவு முறை மாறி இருக்கும்.

1 - இந்திரிய அறிவு

குழந்தை பொம்மைகள் வைத்து விளையாடுவதை பார்த்திருக்கிறீர்களா.

அதன் உலகமே அந்த பொம்மை தான் பொம்மையை பிடுங்கினால் கதறி அழும். இது தான் இந்திரிய அறிவு. சில பேர் அலுவலகத்தில் Char மாறி அமர மாட்டார்கள்.

அது என்னோட char அத கொடுங்க என கேட்பார்கள், ஆசையாக வைத்து இருக்கும் மயில் இறகு, பேனா, Bike, Mobile Phone, Water Can, என்னுடைய அறை, அது பூட்டி இருந்தாலும் பரவாயில்லை வேறு யாரும் போக கூடாது.

சாப்பிட தனி தட்டு இன்னும் எத்தனோயோ பொருட்கள் இவர்களுக்கு அந்நியமாக இருக்கும் பொருட்களின் மீது பற்று இருக்கும்.

அந்த பொருளை வேறு யாரேனும் எடுத்தால் அவ்வளவுதான்., எத்தனையோ முதியவர்கள் கூட இந்த இந்திரிய அறிவிலியேயே அடங்கி போகின்றனர்.

பையில் சில Biscuit கள் வைத்து இருந்தாலும் இப்போது வெளியே எடுத்தால் அனைவரும் சேர்த்து தின்று தீர்த்து விடுவார் என்று எண்ணி தனியாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.

நரசிம்மரை வழிபட்டால் வெற்றி நிச்சயம்

நரசிம்மரை வழிபட்டால் வெற்றி நிச்சயம்


4 பேர் சேர்த்து கடைக்கு சென்றால் அவன் பணம் தரட்டும், அடுத்தவருக்கு பாரம் அளிப்பது, உதவாத பொருள் ஆனாலும் இது என்னுடையது என்று சேர்த்து வைத்து கொண்டு இடத்தை நிரப்பி வைத்திருப்பார்கள்.

2 - புலனறிவு

அதே குழந்தையிடம் ஒரு மாம்பழம் கொடுத்தால் கடித்து ருசி பார்க்கும், சுவை உணரும்., உடலில் உள்ள புலங்கள் வைத்து இன்பம் துயிப்பது புலனறிவு ஆகும்., உணவுக்கு அடிமையாவது.

Mobil Phone Addition, போதை பழக்கம், தகாத உறவு முறைகளில் ஈடுபாடு, எப்போதும் பாட்டு கேட்பது, வித்தியாசமான வாசனை திராவியங்கள் பயன்படுத்துவது, என ஐம்புலன்கள் வழியே இன்பம் அனுபவிப்பதிலே இவர்கள் வாழ்க்கை முழுதும் செலவு செய்வர்.

இவர்கள் புலன் அறிவு பெற்றவர்கள்., வேலை செய்வதே ஒரு பாரமாக நினைப்பர்.

நிம்மதியா விடுங்கள் என அடிக்கடி சலிப்படைந்து பேசுவார் இந்த வகையினர்கள்

3 - மன அறிவு

மன அறிவு என்பது குழந்தை சிறுவனாகும் போது இது மாம்பழம், பசி வந்தால் சாப்பிடலாம்.

இது சோப்பு குளிக்க பயன்படுத்த வேண்டும் என்று பொருட்களை பயன்படுத்துவத்தை தாண்டி அதன் அவசியத்தை புரிந்து கொண்டு அதில் இருந்து தான் எப்பேர்ப்பட்டவர் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வர்.

உங்களுக்கு ஆன்மீக அறிவு பற்றி தெரியுமா? | Spiritual Thoughts Aanmeegam Knowledge Worship

நான் உயர் ரக சோப்பை தான் குளிக்க பயன்படுத்துவேன் என்பதில் இருந்து நான் ஏழை என்னிடம் ஒண்ணுமே இல்லை எனும் வரை.

அனைத்து வகையான மன போராட்டங்களுக்கும் எஜமானாக இருப்பார்கள், பதவி ஆசை, அதிகார போதை, சந்தர்ப்பத்தை பயன்படுத்துதல், குறுக்கு தனமான முன்னேற்றம், Dominating Others, Manipulating Others, புறம் பேசுவது, புலம்புவது, புகழ் பாடுவது, உயர்வு தாழ்வு பார்த்து பழகுவது, தேவைக்காகவே பழகுவது, ஒன்று தான்

பெரியது மற்றவையெல்லாம் பொய் என அவர்கள் நம்புவதை பெரிது என்று வாதாடுவது, இவையெல்லாம் மன அறிவை கொண்டவர்களை சாரும். உலகில் வாழும் மக்களில் பெரும்பாலும் இந்த வகையில் வந்து விடுவர்.

தான் தனது என எல்லை கட்டி கொண்டு அதிலேயே லயித்திருப்பர்,

4 - உயிர் அறிவு

மாம்பழம் வைத்திருக்கும் சிறுவன்., இந்த பழம் எப்படி உருவானது. ஒரு இதனுள் இருக்கும் விதையில் எப்படி இத்தனை பெரிய மரம் ஒளிந்து இருக்கிறது.

இந்த விதைக்கு ஆற்றல் எங்கிருந்து வருகிறது என சிந்திப்பானேயானால் அவன் உயிர் அறிவை கொண்டவனாவன்.,

அன்பு, கருணை மனிதபிமானம்,, குற்றங்களை பொருத்துக்கொள்வது, உயிர்கள் மீது அன்பு,. எல்லா உயிரையும் தன் உயிர் போல நினைப்பது என இவர்களின் தன்மை இருக்கும் எல்லா ஞானிகளும், சித்தர்களும், மஹாகளும், யோகி மற்றும் மகரிஷிகளும் இந்த வகையை சேர்ந்தவர்களே.

இந்த அறிவு எல்லாருக்கும் வர வேண்டும் என மகரிஷி உலக நல வாழ்த்தில் ஒரு வரி வைத்திருப்பார் உலகில் உள்ள பொறுப்புடைய தலைவரேல்லாம் உயிர் அறிவை உள் உணர்வாய் பெறுதல் வேண்டும் 

என இந்த 4 வகைகளில் 100 ல் நீங்கள் எத்தனை சதவிக்கிதம் என கணக்கிட்டு பாருங்கள்., மற்ற 3 ஐயும் முறையாக நீக்கி உயிர் அறிவு பெற்று தன்னிலை விளக்கம் அடைந்து, பிறவி பெருங்கடலை இறை அருள், குரு அருள் துணையுடன் கடப்போம்.

  வாழ்க வளமுடன் 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US