சுமங்கலிப் பெண்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய மந்திரம்

By Sakthi Raj Apr 08, 2024 11:53 AM GMT
Report

ஒரு பெண்ணிற்க்கு கணவன் கண் போன்றவன் என்பர். அப்படியாக ஒரு பெண் தான் தீர்க்கசுமங்கலியாக இருக்கவேண்டும் என்று தினம் கணவனை நினைத்து  இறைவனை பிராத்தனை செய்வதுண்டு.

சுமங்கலிப் பெண்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய மந்திரம் | Sumangalipengal Manthiram

மேலும் பெண்கள் தான் சாவித்திரி போல் மனஉறுதியோடு வாழ வேண்டும் என்று எண்ணுவதுண்டு.

அதாவது உயிர் பிரிந்த  தன் கணவனை அழைத்து செல்ல எமதூதர்கள் வந்த போதிலும் தன் அன்பு கணவனை விடமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்க அவர்களால் சாவித்திரியை நெருங்கமுடியாமல்,

எமனே நேரில் வந்து சாவித்திரியிடம் உயிர் பிரிவது இயல்பு என சொல்லி சத்யவானை அழைத்து சென்ற போதிலும் விடாது, கணவனை பிரிய மனம் இல்லாத சாவித்திரி எமனை பின் தொடர்ந்து சென்று ,

என் ஆசை கணவனை இப்படி பிரித்து கூட்டி செல்கின்றீர்களே நியாயமா ?

இந்த பிரபஞ்சம் இதற்கு கருணை காட்டக்கூடாதா ?

சுமங்கலிப் பெண்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய மந்திரம் | Sumangalipengal Manthiram

எமதர்மராஜானே, ஒரு ஆசை மனைவியின் பிடிவாத வேண்டுதலுக்கும், கணவனின் மீது கொண்ட பக்திக்கும் மனம் இறங்க கூடாதா என்று வேண்ட எமதர்மராஜாவும் சாவித்திரியின் பக்தியை பார்த்து சத்யவானுக்கு மீண்டும் உயிர் கொடுத்த சம்பவம் அனைத்து பெண்களுமே அறிந்திருப்பர்.

சுமங்கலிப் பெண்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய மந்திரம் | Sumangalipengal Manthiram

இப்படி பக்தியாக பிடிவாதமாக உண்மை அன்பு வைக்க எமனும் எவரும் நம்மை நெருங்க அஞ்சுவார்கள் என்பதற்க்கு இவர்கள் சாட்சி,

அப்படியாக சத்யவான் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும். 

ஓம்கார பூர்விகே தேவி வீணாபுஸ்தக தாரிணி
வேதமாதா நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே.
 பதிவ்ரதே மஹாபாகே பர்துஸ்ச ப்ரியவாதினி
அவைதவ்யம் ஸௌபாக்யம்
தேஹித்வம் மம ஸுவ்ருதே
புத்ரான் பௌத்ராம்ஸ்ச ஸௌக்யம்
ஸௌமங்கல்யம் ச தேஹிமே.

இறக்கும் தருவாயில் கூட முக்தி தரும் பாடல்

இறக்கும் தருவாயில் கூட முக்தி தரும் பாடல்


இந்த மந்திரத்தின் ,தனது பெயருக்கு முன் ஓங்காரத்தை உடையவளும், வீணை, புஸ்தகம் இவைகளை தரித்துக் கொண்டிருப்பவளும், வேதங்களுக்குத் தாயுமான காயத்ரீ எனும் ஸாவித்ரி தேவீ.

தங்களுக்கு நமஸ்காரம். கணவனை விட்டுப் பிரியாதிருத்தல் எனும் தீர்க்க சுமங்கலி வரத்தை தாங்கள் எனக்கு அருள வேண்டும் பதிவ்ரதையும் மிகுந்த பாக்யசாலியும், பர்தாவிற்குப் பிரியமான சொல் சொல்கிறவளும், பக்தர்களை ரக்ஷிப்பதையே விரதமாகக் கொண்டவளும் ஆன ஹே தேவி!

என்னை விதவை ஆகாதவளாகச் செய்ய வேண்டும். சத்யவான் மனைவி சாவித்ரியால் அருளப்பட்ட இத்துதியை காரடையான் நோன்பன்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வர தீர்க்கசுமங்கலி பலனும் வரமும் கிடைக்கும்.

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US