யாழ். நல்லூர் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை- யாழ்ப்பாணம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
பெரும் திரளான மக்கள் இந்த திருவிழாவிற்காக வருடக்காலமாக காத்திருப்பார்கள்.
நல்லூர் கந்தனின் அருளை பெற்றுச் செல்வதற்காக வெளிநாடுகளில் இருப்பவர்களும் வருகை தருவார்கள்.
அந்த வகையில் நல்லூரி பெருந்திருவிழாவின் பூஜைகள் தொடர்பான விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
விவரங்கள்
- எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு மஞ்சத் திருவிழா
- 26ஆம் திகதி மாலை 4.45 மணிக்கு கார்த்திகை திருவிழா
- 27ஆம் திகதி காலை 6.45 மணிக்கு சூர்யோற்சவம்
- 31ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு சப்பரத் திருவிழா
- செப்டெம்பர் முதலாம் திகதி காலை 6.15 மணிக்கு தேர்த்திருவிழா
- செப்டெம்பர் 2ஆம் திகதி காலை 6. 15 மணிக்குத் தீர்த்தத் திருவிழா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US