உலகில் சக்தி வாய்ந்த வாஸ்து கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

By Sakthi Raj Jun 25, 2024 11:00 AM GMT
Report

சொந்த வீடு கட்டுவது பெரிய சிரமம் என்றால் அதை கட்டிய பிறகு சில எதிர்பாராத சங்கடங்கள் வந்து விடுகிறது. அதாவது வீடு கட்டும் சந்தோஷத்தில் சில வாஸ்து குறிப்புக்கள் பார்க்க தவறி விடுவோம்.

அதற்கான நேரமும் வீடும் கட்டும் காலத்துல் கிடைப்பதில்லை.ஏன் என்றால் வீடு கட்டும் பொழுது அவசரமாக தாம் நினைத்த தொகையில் வீடு கட்டி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எப்படியாவது வீடு கட்டிவிடலாம் என்று முதலில் கட்டிவிடுகின்றனர்.

பிறகு குடி போன பிறகு சிறு சிறு பிரச்சனை குடும்பத்தில் மேலோங்கும்.அப்பொழுது தான் ஒரு நல்ல ஜோதிடர் கூப்பிட்டு கேட்கும் பொழுது அவர் வாஸ்து பிரச்சனை இருக்கிறது என்று சொல்லுவார்.

உலகில் சக்தி வாய்ந்த வாஸ்து கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா? | Ulagil Sakthi Vaintha Vastu Koyil Engu Irukirathu

பிறகு என்ன முடியும் என்று பலரும் புலம்புவது உண்டு.அவர்களுக்கான பத்தி தான் இது.வாஸ்து பிரச்சனை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

ஒருவருக்கு வாஸ்து மற்றும் நில சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வாக திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூரில் அமைந்திருக்கும் பூமிநாதர் திருக்கோவில் அமைந்து இருக்கிறது.

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய முருகன் ஆலயங்கள்

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய முருகன் ஆலயங்கள்


அங்கு செல்ல பூமியில் உள்ள 16 வகை பிரச்சனைகளை நிவர்த்தி செய்யக்கூடிய கோவில் என்று அகத்தியர் ஓலைச்சுவடியில் இந்த கோவிலைப் பற்றி எழுதியுள்ளார்.

வாஸ்து பிரச்சனை, சொத்து பிரச்சனை, நிலப்பிரச்சனை, வழக்கு நிழுவை, போன்றவற்றை சரி செய்யும். எந்த இடம் பிரச்சனையில் உள்ளதோ அந்த இடத்தில் உள்ள வடக்கிழக்கு மூலையில் உள்ள மண்ணை 3 கைப்பிடி ஒரு மஞ்சள் துணியில் வைத்து எடுத்து வந்து சாமியிடம் பூஜை செய்து திருப்பி எடுத்து வந்து பூஜையறையில் வைத்து விட வேண்டும்.

உலகில் சக்தி வாய்ந்த வாஸ்து கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா? | Ulagil Sakthi Vaintha Vastu Koyil Engu Irukirathu

பூஜை செய்த அடுத்த 5 நாளைக்குள் எடுத்த இடத்தில் அந்த மண்ணை போட்டுவிட வேண்டும். எழுமிச்சை பழத்தை குங்குமம் தடவி அந்த இடத்தில் பிழிந்துவிட்டு வைத்து புதைத்துவிட வேண்டும். பின்பு சூடம் ஏற்றி வேண்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து மஞ்சள் துணியில் 5 ரூபாயை முடிந்து வைத்துவிட வேண்டும். நாம் மனதில் நினைத்த காரியம் 3 முதல் 5 மாதத்திற்குள் நிறைவேறிவிடும்.

நினைத்தது நடந்த பிறகு 5 ரூபாயை எடுத்து வந்து இங்கே அபிஷேகம் செய்ய வேண்டும். இங்கே வன்னி மரம், வில்வ மரம் என்று இரண்டு தலவிருட்சம் உள்ளது. இறைவனின் பெயர் பூமிநாதர். இங்குள்ள அம்பாளின் பெயர் தர்மசம்பர்தினி. அதனால் தர்மமான முறையில் கோரிக்கைகள் வைக்க வேண்டும்.

இங்குள்ள நவகிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியிருக்கும், சூரியன் சனியை நோக்கியிருக்கும். இங்கே ராகு, கேது சர்ப்பமாக இல்லாமல் முழுமையாக இருக்கிறார்கள். சொத்து பிரச்சனை, மண் சம்மந்தமாக இருக்கும் பயம் போன்றவற்றை போக்குவார்.

சொத்து சேரவேண்டும் என்ற வேண்டுதலையும் நிறைவேற்றி வைப்பார். ஆக நில பிரச்சனை வாஸ்து பிரச்சனை என்று மனம் குழம்பாமல் பூமிநாதரை தரிசிக்க எல்லாம் சரி ஆகும்.பூமியில் தெரிந்தும் தெரியாமலும் செய்த அனைத்து விஷயங்களுக்கும் தீர்வு இருக்கிறது.

ஆக நேர்மை எண்ணத்தோடு வாழ்ந்து இறைவனை தரிசிக்க அனைத்தும் நலமாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US