Varahi Amman: வாராஹி அம்மனை வழிபடும் முறை
சப்த கன்னியர்களில் ஐந்தாவது கன்னியான வாராஹி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆவார்.
தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்ட வாராஹி அம்மன் இரக்கமும், தாராள குணமும் உடையவள்.
வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் கூறப்படுவதுண்டு.
பெண்ணின் உடலும், பன்றியின் முகமும் கொண்ட வாராஹி அம்மன், தீயசக்திகளை அடித்து விரட்டக்கூடியவர்.
அம்மனை சரியான முறையில் விரதம் இருந்து வழிபட்டால் வேண்டிய வரங்களை அருளக்கூடியவர் என்பது நம்பிக்கை.
மனதில் கெட்ட எண்ணங்கள் இல்லாமல் மனத்தூய்மையுடன் வாராஹி அம்மனை ஒருமனதாக வழிபட வேண்டும்.
அப்படி வணங்கும் போது வாராஹிக்கு உரிய திசையான வடதிசையில் அம்மனின் முகம் இருக்கும்படி வைத்து வழிபட வேண்டும்.
வழிபடும் முறை
தினமும் ஒரு அகல்விளக்கு ஏற்றிவைத்து வழிபட்டு வாருங்கள், அந்நேரம் அம்மனுக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்திக் கொள்ளவும்.
தயிர் சாதம், மாதுளையுடன் சிவப்பு நிறம் கொண்ட மலர்களை வைத்து வழிபடலாம், கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு வரவும்.
சனி ஆதிக்கம் உள்ளவர்கள் மற்றும் ஏழரை சனியை அனுபவிப்பவர்கள் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாராஹி அம்மனை வழிபடலாம்.
என்ன நாளில் என்ன பலன்
ஞாயிறன்று வணங்கினால் நோய் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.
திங்களன்று வணங்கினால் மனகவலைகள் நீங்கி மகிழ்ச்சி குடிகொள்ளும்.
செவ்வாயன்று வணங்கினால் வீடு, நிலம் தொடர்பான சிக்கல்கள் நீங்கும்.
புதனன்று வணங்கினால் கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வியாழன்று வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்வியின் முன்னேற்றம் உண்டு.
வெள்ளியன்று வணங்கினால் மாங்கல்ய பலமும், வியாபார விருத்தியும் உண்டாகும்.