ஆசிய கண்டத்தில் அபூர்வ நடராஜர்: தீராத நோய்களையும் குணப்படுத்தும் அதிசயம்

By Fathima Apr 07, 2024 01:01 PM GMT
Report

இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்களை தாக்கும் நோய்களில் ஒன்றாகிவிட்டது சிறுநீரக நோய்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளால் நோயை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

இந்த பதிவில் தீராத நோய்களையும் குணப்படுத்தும் அற்புத தீர்த்தம் குறித்து தெரிந்து கொள்வோம்.

அருள்மிக ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் கோயில்

மிக பழமைவாய்ந்த ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது, ஊட்டத்தூரின் மேற்குபகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார், இங்கு ராஜராஜ சோழன் அவ்வப்போது வருகை தருவது உண்டு.

ஆசிய கண்டத்தில் அபூர்வ நடராஜர்: தீராத நோய்களையும் குணப்படுத்தும் அதிசயம் | Sutharathineswarar Temple Ootathur In Tamil

அப்படி ஒருநாள் மன்னரின் வருகைக்கு முன்பாக வழியில் உள்ள புற்களை அழிக்கும்பணி நடைபெற்றது. அந்நேரத்தில் ஓரிடத்தில் இருந்து எதிர்பாராது ரத்தம் வழிந்தோடியது.

உடனடியாக வந்து மன்னரிடம் இதை தெரிவிக்க, அவர் சென்று பார்த்தபோது தழும்போடு கூடிய சிவலிங்கம் ஒன்று காட்சியளித்தது.

அந்த இடத்தில் கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டு எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் கோயில் ஆகும்.

50 ஆண்டுகளுக்கு பின் சதுர்கிரஹி யோகம்: எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

50 ஆண்டுகளுக்கு பின் சதுர்கிரஹி யோகம்: எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்


இன்றளவும் கூட லிங்கத்தின் தலைப்பகுதியில் வெட்டுப்பட்ட காயம் காட்சியளிக்கும்.

அற்புதங்கள் நிகழ்த்தும் தீர்த்தம்

உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் ஒன்றிணைத்து பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார்.

இந்த நீரை எடுத்துச்சென்று உடல் நலம் குன்றியவர்களுக்கு கொடுத்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

ஆசிய கண்டத்தில் அபூர்வ நடராஜர்: தீராத நோய்களையும் குணப்படுத்தும் அதிசயம் | Sutharathineswarar Temple Ootathur In Tamil

ஒருமுறை ராஜராஜ சோழன் உடல்நலம் குன்றிய போது. இந்நீரை எடுத்து பருகி தன் ஆயுட்காலம் முழுமையும் ஆரோக்கியமாக வாழ்ந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

கோயில் மூலஸ்தானத்தில் தீபாராதனைக்கு பதிலாக பக்தர்களின் கையில் பிரம்ம தீர்த்த நீரை வழங்குவதும் இங்கு வழமையான ஒன்றே.

Vastu Tips: வீட்டில் மருதாணி செடியை வளர்க்கலாமா?

Vastu Tips: வீட்டில் மருதாணி செடியை வளர்க்கலாமா?


இதேவேளை சிறுநீரக நோய்கள், நீரிழிவு நோய்களுக்கு இத்தீர்த்தம் மருந்தாகிறதாம்.

ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோயிலும் இதுவே, பதவியை இழந்த இந்திரன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து பதவியை மீண்டும் பெற்றார்.

ஆசிய கண்டத்தில் அபூர்வ நடராஜர்: தீராத நோய்களையும் குணப்படுத்தும் அதிசயம் | Sutharathineswarar Temple Ootathur In Tamil

சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கும் சக்தியும் இந்த நடராஜருக்கு உண்டு.

எனவே தான் இங்கு வந்து வணங்கினால் நினைத்தது நடக்கும், சாபவிமோசனமும் கிடைக்கும், வேறு எந்த கோயிலிலும் சிவனின் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கண்டத்தில் அபூர்வ நடராஜர்: தீராத நோய்களையும் குணப்படுத்தும் அதிசயம் | Sutharathineswarar Temple Ootathur In Tamil

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US