செல்வ வளம் பெறுக வீட்டில செய்யவேண்டிய பரிகாரம்

By Sakthi Raj Aug 04, 2024 11:44 AM GMT
Report

செல்வம் என்றாலே மஹாலக்ஷ்மி தயார் தான் முதலில் நமக்கு நினைவிற்கு வருவார்கள்.அப்படியாக அம்மையின் அருள் கிடைக்க நமது வீட்டில் செல்வம் பெருகும்.

மேலும் மஹாலக்ஷ்மி தாயாரின் அருள் கிடைத்தால் மட்டுமே வீட்டில் வந்த பணவரவுகள் எல்லாம் விரயம் ஆகாமல் செழிப்பாக இருக்கும்.

இப்பொழுது பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கு ஏற்ப பண விரயமும் கூடவே வரும்.அதை எப்படி சமாளிப்பது அதற்கான பரிகாரம் என்னவென்று பார்ப்போம்.

செல்வ வளம் பெறுக வீட்டில செய்யவேண்டிய பரிகாரம் | Veetil Selvam Sera Naam Seiyavendiya Parigaram

இந்த பரிகாரத்தை மகாலட்சுமி தாயாருக்குரிய உகந்த நாளான வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் வளர்பிறை வெள்ளிக்கிழமையாக இருந்தால் நல்லது.

எதிரிகள் தொல்லையில் இருந்து நம்மை காக்கும் காளி மந்திரம்

எதிரிகள் தொல்லையில் இருந்து நம்மை காக்கும் காளி மந்திரம்


மாதத்தில் ஒரு நாள் மட்டும் வளர்பிறை வெள்ளிக்கிழமையாக பார்த்து இந்த ஒரு பரிகாரத்தை செய்து விட்டோம் என்றால் அந்த மாதம் முழுவதும் நமக்கு வீண்விரயம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

இதற்கு நமக்கு ஒரு சிவப்பு நிற துணி வேண்டும். அடுத்ததாக இரண்டு சோழிகள் வேண்டும். பொதுவாக சோழி மகாலட்சுமியின் தாயாரின் அம்சம் பொருந்தியது.

செல்வ வளம் பெறுக வீட்டில செய்யவேண்டிய பரிகாரம் | Veetil Selvam Sera Naam Seiyavendiya Parigaram

பொதுவாகவே சோழி இருக்கும் வீட்டில் மகாலட்சுமியின் அருள் இருக்கும். இரண்டு சோழிகளை வாங்கி சுக்கிர ஹோரையில் சிவப்பு நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி அதை மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

இப்படி வழிபாடு செய்து முடித்துவிட்டு இந்த மூட்டையை நீங்கள் பணம் வைக்கும் பணப்பெட்டியில் வைத்து விட வேண்டும்.

அப்படி செய்வதின் மூலம் மஹாலக்ஷ்மி தாயாரின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும்.வீண் செல்வுகள் தேவை இல்லாத பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்றுவாள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US