ஜோதிட ரீதியாக இந்த காலகட்டங்களில் ஒருவருக்கு பெயர் புகழ் கட்டாயம் வருமாம்
ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய வாழ்க்கையில் பெயர் புகழ் பெற வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு உரிய காலம் வந்தாலே சாத்தியம்.
மேலும், ஜோதிட ரீதியாக நாம் அந்த காலத்தை தான் கிரகங்களுடைய தசா புத்திகள் கிரக மாற்றங்கள் என்று அழைக்கின்றோம். அந்த வகையில், ஜோதிட ரீதியாக எந்த தசா புத்தி காலங்கள் நடந்தால் ஒரு நபருக்கு தங்களுடைய வாழ்க்கையில் பெயர் புகழ் அதிர்ஷ்டம் வரும் என்று பார்ப்போம்.

ஒருவர் எந்த ராசி லக்னமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களுக்கு அவர்களுடைய ஜாதகப்படி 1,5,9 ஆகிய தசா புத்திகள் நடக்கின்ற பொழுது அந்த ஜாதகர் மிகப்பெரிய அளவில் புகழ் பெறுவார் என்று சொல்கிறார்கள்.
அல்லது ஜாதகர் 1,5,9 வீட்டில் இன்று கிரகங்கள் அதிபதிகளுடைய தசா புத்திகள் நடந்தாலும் அவர்கள் மிகப்பெரிய அளவில் யோகத்தை பெறுவார் என்று சொல்லப்படுகிறது.
அதைப்போல், ஒருவருக்கு செவ்வாய் மற்றும் சூரியன் குரு தசாபுத்தி நடந்தாலும் அவர்களுக்கு நல்ல புகழ் வாய்ப்புகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனுடன் ஜாதகருடைய லக்னாதிபதியுடன் ஒருவர் தொடர்பு பெற்றால் நிச்சயம் தவிர்க்க முடியாத பெயர் புகழ் உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |