இவர்களிடம் பிரச்சினையே இருக்காது.. ஒழுக்க சீலர்களாக வாழும் ராசியினர்

By DHUSHI Oct 01, 2025 08:52 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டது போன்று ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் அவர்களுக்கு என தனி குணங்களை கொண்டிருப்பார்கள்.

தன்னடக்கம், ஒழுக்கம், பொறுமை போன்ற நற்பண்புகளால் சிலர் ஆளப்படுவார்கள். இவர்களிடம் உறவில் இருக்கும் பொழுது எந்தவித பிரச்சினையும் இருக்காது.

இப்படியான பண்புகளை கொண்டவர்கள் "ரூல்ஸ் போட்டு வாழும்" நபர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் எந்த விடயம் நடந்தாலும் அதற்கு ஒழுக்கமாக தீர்வு காண்பார்கள்.

அந்த வகையில் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒழுக்க சீலர்களாக இருப்பவர்கள் பிறந்திருக்கும் ராசிகள் என்னென்ன? அவர்களிடம் காணப்படும் பண்புகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.    

ஒழுக்க சீலர்களாக வாழும் ராசியினர்

ரிஷபம் (Taurus)ரிஷப ராசியில் பிறந்தவர்கள் விதிமுறை மதித்து வாழும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒழுக்கமான வாழ்க்கை, நேர்மறை சிந்தனை, பண்பாட்டின் உச்சம் ஆகிய இயல்புகள் கட்டாயம் இவர்களிடம் இருக்கும். இதனால் வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களை இலகுவாக கடந்து விடுவார்கள். தொழிலில் திட்டம் அதிகம் போடுவார்கள். இதனால் நீதி சிக்கல்களை தவிர்த்து நல்லதொரு முன்னேற்றத்தை காண்பார்கள். 
கன்னி (Virgo) கன்னி ராசியில் பிறந்தவர்கள் தலைசிறந்த கலைஞர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் விதிகள் இல்லாமல் இருக்காது. தினமும் அவர்களின் வாழ்க்கையில் உணவு, உடற்பயிற்சி, வேலை அனைத்திலும் கவனமாக இருப்பார்கள். சரியான ஒழுக்க பாதையில் இருக்கும் இவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் பொறுமையாக நடந்துக் கொள்வார்கள். கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். 
மகரம் (Capricorn) மகர ராசியில் பிறந்தவர்கள் இலக்குகளை இலகுவாக அடைந்து விடுவார்கள். திட்டமிட்டல், கடின உழைப்பு. பொறுமை, சாந்தம், அன்பு நிறைந்த மனம் ஆகிய குணங்கள் வாழ்க்கையின் அடுத்த நகர்விற்கு உதவியாக இருக்கும். சமூகத்தில் அதிகமான மக்களால் மதிக்கப்படுவார்கள்.



ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US