நாளை (24-04-2025) வருதினி ஏகாதசி அன்று இந்த விஷயங்களை மட்டும் செய்யாதீர்கள்

By Sakthi Raj Apr 23, 2025 12:18 PM GMT
Report

 தர்மத்தின் தலைவன் பெருமாள் அவர் நீதி நேர்மையை நிலைநாட்டுபவர். அப்படியாக, பெருமாளின் அருளை பெறுவதற்கு ஏற்ற மிக முக்கியமான நாளாக ஏகாதசி இருக்கிறது. இந்த ஏகாதசி நாளில் நாம் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

அப்படியாக, ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி வருகிறது. இந்த நாளில் விஷ்ணு பகவானை வழிபாடு செய்வதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது. இந்த வருடம் ஏப்ரல் 24 ம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது.

அதாவது, ஏப்ரல் 23ம் தேதி பகல் 12.15 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 24ம் தேதி காலை 10.26 வரை ஏகாதசி திதி உள்ளது. அன்றைய தினம் நாம் சில விதிமுறைகளை பின்பற்றினால் நமக்கு வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். அப்படியாக, அன்றைய தினத்தில் நாம் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.

நாளை (24-04-2025) வருதினி ஏகாதசி அன்று இந்த விஷயங்களை மட்டும் செய்யாதீர்கள் | Yegathasi Viratham Kadaipidikum Murai

ஏகாதசி விதிமுறைகள் :

1. ஏகாதசி நாள் அன்று பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும். அதிகாலை எழுந்து புனித நீரில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். நம்முடைய உடல் மற்றும் மனம் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

2. கண்டிப்பாக உணவுகளில் அசைவம், வெங்காயம், பூண்டு போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.

3. சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். விரதத்தை முழுமையான நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.

4. அதே போல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடக்கூடாது. ஏகாதசி அன்று இவை தடை செய்யப்பட்ட உணவுகள்.

5. நாளைய தினம் துளசி செடியில் தண்ணீர் ஊற்றி பராமரிக்கலாம். ஆனால் நாளைய தினம் மறந்தும் துளசி செடியை பறிக்க கூடாது. அது லட்சுமி தேவியை அவமதிக்கும் செயல் ஆகும்.

6 கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதம் முதல் அதிர்ஷ்ட வலைக்குள் சிக்கும் ராசியினர் யார்?

6 கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதம் முதல் அதிர்ஷ்ட வலைக்குள் சிக்கும் ராசியினர் யார்?

6. அதே போல், ஏகாதசிக்கு முந்தைய நாள் தலைக்கு குளிக்க வேண்டும். ஆனால், ஏகாதசி அன்று குளிக்க கூடாது.

7. மிகவும் புனித நூல்களாக கருதப்படும் பகவத் கீதையை படிக்க வேண்டும். கண்டிப்பாக, விஷ்ணுவின் மந்திரங்களை சொல்ல வேண்டும். இதனால் மனம் அமைதியாக இருக்கும்.

8. வழிபாடு செய்ய எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. நெய் பயன்படுத்தலாம். அது தூய்மையானது.

9. துவாதசி அன்று விரதத்தை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும்.

10. கண்டிப்பாக, ஏகாதசி நாளில் தூங்கக்கூடாது. பொய் சொல்ல கூடாது. பிறர் மனம் கஷ்டப்படும் வகையில் பேசக்கூடாது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US