ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?
தமிழ் மாதத்தில் ஆனி மாதம் மிகவும் விஷேசம் நிறைந்த மாதமாகும். ஆனால், இந்த மாதத்தில் மொத்தம் 32 நாட்கள் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அதாவது ஆங்கில மாதங்களைப் போல, தமிழ் மாதங்கள் சமமாக 30, 31 தேதிகளுடன் இருப்பதில்லை.
பங்குனி மாதத்தில் 30 நாட்கள் என்றால், சித்திரை மாதம் 31 நாட்கள் என இருக்கும். அதே போன்று கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் 29 நாட்கள் இருக்கும். ஆனால், இந்த ஆனி, ஆவணி மாதம் மட்டும் 32 நாட்கள் உள்ளது. அது ஏன் என்பதைப் பற்றி பார்ப்போம்.
ஆனி மாதத்தில் சூரியன் வடதிசைநோக்கிய பயணமான உத்தராயண காலத்தின் கடைசி மாதமாக வருகிறது. மேலும், நம் நாட்டில் நீண்ட பொழுது கொண்ட மாதமாகவும் ஆனி மாதம் அமைகிறது. இந்த மாதத்தில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை கூடுதலான பகல் பொழுது உள்ளது.
அதனால், தமிழ் மாதத்தில் பெரிய மாதமும் இதுவே. அதனால், தான் இந்த மாதத்தில் 32 நாட்கள் உள்ளது. ஜோதிடத்தில் மிதுன ராசி பெரிய ராசி என்பதால், இதைக் கடக்க சூரியனுக்கு சற்று கூடுதல் காலம் தேவைப்படுவதால் ஒரு நாள் அதிகமாக எடுத்துக்கொள்கிறார். அதன் காரணத்தினால் தான் ஆனி மாதத்தில் பகல் பொழுதின் அளவு அதிகரிக்கிறது.
மேலும், இந்த ஆனி மாதத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரமும், பௌர்ணமியும் பெரும்பாலும் சேர்ந்தே வரும். அதனால் பௌர்ணமி அன்று பிறக்கும் குழந்தை மிகவும் பிரகாசமாகவும், அரசாளும் யோகத்தையும், ஆளுமைத் திறன் கொண்டதாக பிறக்கும். அதனால் தான் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழி சொல்லுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |