கருடபுராணம்: இறந்தவர்களின் இந்த 4 பொருட்களை மட்டும் கட்டாயம் பயன்படுத்தாதீர்கள்
மனிதனுக்கு பிறப்பு என்று இருந்தால் கட்டாயம் இறப்பு ஒன்று இருக்கும். அப்படியாக, கருட புராணத்தில் இறந்த மனிதர்களின் சில பொருட்களை நாம் பயன் படுத்தக்கூடாது என்று சொல்கிறார்கள். அவை என்ன பொருட்கள் என்று பார்ப்போம்.
கருட புராணம் இந்து மதத்தில் ஒரு முக்கியமான நூலாகும். இந்த நூலில் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை எவ்வாறு இருக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், கருட புராணத்தில் இறந்த மனிதர்களின் ஆன்மா சாந்தி அடைய நாம் சில விஷயங்கள் பின்பற்ற வேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கிறது.
அதில் முக்கியமாக இறந்தவர்களின் பொருட்களை நாம் மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்பதே. காரணம் இறந்தவர்களின் சக்தி அந்த பொருட்களில் இருக்கும் என்பதால் அதை நாம் பயன் படுத்தும் பொழுது அவர்களின் ஆன்மா நம்மை நோக்கி ஈர்க்கப்படலாம் என்கிறார்கள்.
அப்படியாக, இறந்தவர்களின் ஆடைகளை நாம் ஒருவருடத்திற்கு உபயோகம் செய்யக்கூடாது. ஏனென்றால், ஒருவர் அணியும் உடையில் அவருடைய சக்தி இருக்கும். தானம் செய்ய வேண்டும் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அதை உபயோகம் செய்யவேண்டும் என்று நினைத்தாலும், அதை ஒருவருடம் கழித்தே செய்யவேண்டும்.
மேலும், நாம் ஒருவருடம் கழித்து அந்த ஆடைகளை உபயோகம் செய்யும் பொழுது அதை நன்றாக துவைத்த பிறகு உபயோகிக்கலாம். அடுத்ததாக, இறந்தவர்களின் நகைகளையும் நாம் சுமார் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
அவ்வாறு பயன்படுத்தும் பொழுது உணர்வுகளில் சில தடுமாற்றத்தை உண்டு செய்யும். அதேப்போல் தான் இறந்தவர்களின் கடிகாரத்தை பயன்கூடாது. ஏனெனில் கடிகாரத்தில் இறந்தவர்களின் ஸ்பரிசம், உயிர்ப்பு சக்தி இருக்கும்.
அடுத்ததாக, இறந்தவர்களின் காலணிகளையும் நாம் அணியக் கூடாது. அவ்வாறு அணியும் பொழுது நமக்கு சில தோஷங்கள் உண்டாகலாம் என்கிறது கருடபுராணம். மேலும், மனிதனுக்கு இறப்பு என்பது திடீர் என்று நடக்கூடிய நிகழ்வு, அதனால் இறந்த ஆன்மாவும், அவர்களின் உறவுகளும் தடுமாற்றத்தில் இருப்பார்கள்.
அவர்களுக்கு அந்த சமயம் அமைதியும், நடந்ததை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் தேவைப்படுகிறது. அந்த வேளையில் நாம் இறந்தவர்களின் பொருட்களை பயன்படுத்தும் பொழுது நாமும் அவர்களின் நினைவில் மீளமுடியாமல் வாடுவதோடு, இறந்த ஆன்மாவும் நிம்மதியை இழந்து தவிக்கும் என்பதால் முடிந்த அளவு ஒருவருட காலம் நாம் அவர்களின் எந்த பொருட்களையும் உபயோகம் செய்யக்கூடாது என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |