பௌர்ணமி அன்று சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த சிவன் மந்திரம்

By Sakthi Raj Oct 17, 2024 11:30 AM GMT
Report

இன்று புரட்டாசி மாதம் கடைசி பௌர்ணமி.இன்றைய நாளில் அனைத்து கடவுள் வழிபாட்டிற்கும் உகந்த நாள்.இந்த நாளில் பெரும்பாலான மக்கள் குலதெய்வ வழிபாட்டிற்கும் அம்மன் வழிபாட்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்வார்கள்.

ஆனால் அந்த வழிபாட்டிற்கு நிகராக மிக முக்கிய வழிபாடாக பௌர்ணமி சிவபெருமான் வழிபாடு பார்க்கப்படுகிறது.இன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்வது சிறந்த பலன்களை நாம் பெற முடியும்.

பௌர்ணமி அன்று சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த சிவன் மந்திரம் | Benefits Of Chanting Sivan Mantras

மற்ற நாட்களில் வில்வ இலையைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சனை செய்தால் ஒரு மடங்கு பலம் தான் கிடைக்கும்.அதே பௌர்ணமி நாளான இன்று சிவலிங்கத்திற்கு ஒரு வில்வ இலையைக் கொண்டு அர்ச்சனை செய்தால் ஒரு லட்சம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்த பலன் கிடைக்கிறது.

வெற்றியை தரும் புரட்டாசி பௌர்ணமி வழிபாடு

வெற்றியை தரும் புரட்டாசி பௌர்ணமி வழிபாடு


இதை செய்வதால் நாம் நினைத்த காரியமும் நிறைவேறும். இன்று வீட்டில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து அப்பம் நெய்வேதியமாக செய்து வைத்து வழிபாடு செய்தால் கோடான கோடி நன்மைகள் நடக்கும்.

முடிந்தால் அந்த அப்பத்தை நாலு பேருக்கு தானமாக கொடுங்கள்.அதோடு மட்டும் அல்லாமல் பூஜை செய்யும் பொழுது சிவபெருமானின் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்ல நம்முடைய கஷ்ட காலங்கள் விலகி நன்மை உண்டாகும்.

பௌர்ணமி அன்று சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த சிவன் மந்திரம் | Benefits Of Chanting Sivan Mantras

சிவ மந்திரம் 

விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
சிவசிவ ஹரஹர மஹாதேவ
வில்வதள ப்ரிய சந்திர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
மெளலீஸ்வராய யோகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
குஞ்சேஸ்வராய குபேராஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
நடேஸ்வராய நாகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவ
கபாலீஸ்வரய்யா கற்கடேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



















+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US