சுமங்கலி பெண்கள் மொட்டை அடிக்கலாமா? சாஸ்திரம் சொல்வதென்ன?
பெண்கள் சில சமயங்களில் குடும்பத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சனைகள் தலை தூக்குகிறது என்றால் அதிலிருந்து விடுபடுவதற்கு சில வேண்டுதல் செய்து கொள்வது உண்டு.
அந்த வகையில், அவர்கள் விரத்தியால் மிகப்பெரிய அளவில் ஒரு பிரார்த்தனை ஒரு வேண்டுதலை வைத்து விடுகிறார்கள்.
அதில் முக்கியமான ஒன்று மொட்டை அடிப்பது. அப்படியாக, சுமங்கலி பெண்கள் மொட்டை அடிக்கலாமா? சாஸ்திரம் சொல்வது என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

சாஸ்திரப்படி சுமங்கலி பெண்கள் மொட்டை அடிப்பது நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது. முடிந்தவரை இவ்வாறான வேண்டுதலை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
ஒருவேளை இவ்வாறான வேண்டுதல்கள் அவர்கள் வைத்துவிட்டாலும் மொட்டை அடிப்பதற்கு பதிலாக பூ முடி அதாவது முடியை பாதியை இறைவனுக்கு சமர்ப்ப கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள்.
இல்லையென்றால் வேண்டுதல் நிறைவேறி விட்டு மீண்டும் இவ்வாறு வேண்டுதல் வைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது என்று சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |