கோயிலில் விளக்கு ஏற்றுவதால் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள்
ஒளி அதற்கு மிக பெரிய ஆன்மீக பலம் இருக்கிறது.அந்த ஒளியானது ஒருவரது வாழ்க்கையில் பெரும் அளவில் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் உடையது.அப்படியாக நாம் மனதார இறைவனை நினைத்து ஏற்றும் விளக்கிற்கு அதிக சக்திகள் உண்டு.
அவை நம்முடைய வாழ்க்கையில் உள்ள தோஷம் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை எடுத்து விடும்.ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை கொடுக்கும் இந்த ஒளியான தீபத்தை எங்கு?எப்பொழுது ஏற்றினால் சிறந்த பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
ஒருவர் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவே அவரது வாழ்க்கை பிரகாசமும் இருக்கும்.
எனவே,அவர்கள் தங்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் ஒரு தீபம் ஏற்றி வழிபட அவர்களை சூழ்ந்து உள்ள எதிர்மறை சக்திகள் மற்றும் தோஷங்கள் விலகி அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும்.
பொதுவாக இந்துக்கள் வீடுகளில் நாம் கட்டாயம் இறைவனை வணங்கி தீபம் ஏற்றுவது உண்டு.அப்படியாக ஒருவர் வீடுகளில் ஏற்படுகின்ற தீபங்கள் அந்த வீட்டில் இருளை போக்குவதோடு மட்டுமல்லாமல் வீட்டில் உண்டான கஷ்டங்களையும் துன்பங்களையும் அகற்றுகிறது.
ஒரு வீட்டில் எந்த அளவில் அதிக எண்ணிக்கையிலான தீபங்கள், எவ்வளவு நேரம் ஏற்றி ஒளிர செய்யப்படுகிறதோ அந்த அளவிற்கு திருஷ்டிகள் விலகி நன்மைகள் உண்டாகும். இந்த தீப ஜோதி சுடர்கள் எத்தகைய திருஷ்டி தோஷ கதிர்களையும் விலக்க செய்யும் சக்திகள் உண்டு.
தீபங்களின் உள்ள ஒளிகளை உற்றுநோக்கி குறைந்தது ஒரு நாளைக்கு 5 நிமிடங்களாவது தொடர்ந்து தரிசிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் நம்மில் ஏற்பட்டுள்ள பலவித திருஷ்டி தோஷங்கள் கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் புத்திகூர்மை அதிகரிக்கிறது. முகத்தில் தேஜஸ் உண்டாகிறது. எத்தகைய திருஷ்டி தோஷங்களுக்கும் சரியான, முறையான பலமான பரிகாரம் தீப ஜோதி வழிபாடுதான்.
ஆக எத்தனை பெரிய கஷ்டங்கள் உருவானாலும் இறைவனை மனதார நினைத்து விளக்கு ஏற்ற வந்த துன்பம் அது அடியோடு விலகி நன்மை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |