லட்சுமி தேவியின் அருள் பெற கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள்

By Sakthi Raj Jun 23, 2024 08:00 AM GMT
Report

அம்பாளின் அருளை பெறுவது அவ்வளவு எளிது இல்லை.அம்பாளின் பரிபூர்ண அருளை பெற நிறைய விஷயங்களை ஆன்மீக ரீதியாக கடைபிடிக்க வேண்டி இருக்கிறது.

அதில் நாம் லட்சுமி தேவியின் அருளை பெற வீட்டில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.

லட்சுமி தேவியின் அருள் பெற கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள் | Lakshmi Devi Arulai Pera Naam Seiyavendiyavai

பொதுவாக வீடுகளில் விளக்கு ஏற்றும் பொழுது வீட்டில் யாரும் தூங்க கூடாது.காலை மாலையில் லட்சுமி தேவி நம் வீட்டிற்கு வருவார்கள்.அவர்களின் அருளை பெற வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிக அவசியம்.

மாலை வேளையில் வீடுகளில் துளசி இருந்தால் துளசியை பறிப்பதை தவிர்த்து விட வேண்டும்.

மேலும் விளக்கு ஏற்றும் வேளையிலும் அல்லது பிற நேரங்களிலும் பெண்களை திட்டுவதை தவிர்க்க வேண்டும்.பெண்கள் லக்ஷ்மியின் ரூபம்.அவர்கள் மனம் குளிருந்து மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே வீட்டில் சந்தோஷ நிகழ்வுகள் நடக்கும்.

பூஜை செய்யும் பொழுது மணி அடிப்பதின் அவசியம்

பூஜை செய்யும் பொழுது மணி அடிப்பதின் அவசியம்


வீடுகளை எக்காரணத்தாலும் விளக்கு ஏற்றிய பிறகு மாலையில் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தல் கூடாது.அப்படி செய்யும் பொழுது வீட்டில் உள்ள மஹாலக்ஷ்மி வீட்டில் தங்குவது இல்லை.

சின்ன சின்ன விஷயங்கள் தான் இதை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்கிறது.மேலும் நாம் லட்சுமி தேவியின் அருள் ஆசியை பெறலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US