நீண்ட நாள் திருமணம் நடைபெறவில்லை என்ற கவலையா? இந்த ஒரு வழிபாட்டை செய்யுங்கள்
இந்த உலகத்தில் மாற்ற முடியாத என்ற ஒரு விஷயம் ஒன்றே ஒன்று மட்டும் இருக்கிறது "இறப்பு". ஒருவர் இறந்துவிட்டால் அவர்களை மீட்டுக் கொண்டு வருவது மட்டும்தான் இந்த உலகத்தில்இன்னும் நடைபெறாத ஒரு நிகழ்வாக இருக்கிறது.
இருப்பினும் இறந்தவர்களுடைய உறுப்பு தானத்தால் பலரையும் உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் அவர்களை இந்த பூமியில் வாழ செய்கின்றோம். அப்படியாக, இந்த பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய காதுகளோடு நாம் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

அதனால், இந்த பிரபஞ்சத்திடம் நம்முடைய வேண்டுதலை சொல்ல கட்டாயம் நம்முடைய வேண்டுதலுக்கு செவி சாய்த்து நாம் கேட்ட வரத்தையும் நமக்கான இடத்திலும் கொண்டு சேர்க்கும். அப்படியாக, ஒரு மனிதனுடைய வாழ்க்கை திருமணத்தில் பூர்த்தியாகின்றது.
ஆனால் பலருக்கும் அந்த திருமணத்தில் தாமதம் ஏற்பட்டு வயது கடந்து கொண்டே போவதை காணலாம். அந்த வகையில், திருமணம் தாமதத்தை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

திருமண தலங்களில் ஒன்றாக விளங்க கூடியது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம். இங்குள்ள கல்யாண சுந்தரர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் மீனாட்சி நடுவில் இருக்க, வலப்புறம் திருமாலும், இடப்புறம் சொக்கநாதரும் நின்று நமக்கு காட்சி கொடுப்பார்கள். மணமகளாக மீனாட்சி, மணமகனாக சொக்கநாதரும் கம்பீரத்துடனும் காட்சி கொடுப்பார்கள்.
மைத்துனர் எனும் முறையில் தீர்த்த பாத்திரத்தை சொக்கநாதர் கையில் தாரை வார்த்தபடி இருப்பார். திருமால் இந்த கல்யாண சுந்தரரை வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்பவர்களுக்கு திருமலை யோகம் கைக்கூடி வரும்.
இந்த திருவுருவப்படத்தை நாம் தினமும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்தாலும் நிச்சயம் வீடுகளில் விரைவில் திருமண யோகம் கை கொடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |